டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

ட்விட்டரில் இனி  2 மணி நேர விடியோவை பதிவேற்றலாம்

மைக்ரோ பிளாக்கிங் தளத்தின் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர்கள் இனி 2 மணி நேர விடியோக்களை பதிவேற்ற முடியும் என்று எலான் மஸ்க் இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளார்.

News image
Updated On :25 மே 2023, 5:33 pm IST

வாஷிங்டன்: மைக்ரோ பிளாக்கிங் தளத்தின் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர்கள் இனி 2 மணி நேர விடியோக்களை பதிவேற்ற முடியும் என்று எலான் மஸ்க் இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளார்.

முதலில் பணியாளர்களை குறைத்த மஸ்க் பிறகு 'ப்ளூ டிக்' உள்ளிட்ட கட்டண நடைமுறைகளையும் கொண்டு வந்தார்.

தற்போது ப்ளூ வெரிஃபைட் சந்தாதாரர்கள் இனி 2 மணி நேர விடியோ அதாவது 8 ஜிபி வரை பதிவேற்றலாம் என்று எலான் மஸ்க் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட டெக் போர்ட்டலான டெக் க்ரஞ்சின் கூற்றுப்படி, ட்விட்டர் அதன் கட்டண திட்டத்தில் மாற்றங்களைச் செய்துள்ள நிலையில், முந்தைய 60 நிமிட வரம்பை இனி இரண்டு மணி நேரமாக விரிவுபடுத்தியுள்ளது.

எலான் மஸ்க் இந்த செய்தியை அறிவித்த உடனே, பல சமூக ஊடக பயனர்கள் தங்கள் கமெண்டுகளை பகிர்ந்து வருகின்றனர்.

ஒரு பயனர், 'ட்விட்டர் புதிய நெட்ஃபிக்ஸ்' என்று பதிவு செய்துள்ளார்.

மற்றொரு பயனர், 'மிகவும் அருமை! இது சாத்தியமாவதற்கு நன்றி என்றார்'.

'ட்வீட்யூபிற்கு வரவேற்கிறோம் என்று ஒரு பயனர் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

இந்த அப்டேட் தற்போது ப்ளூ டிக் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்க பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.