ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மெளன அஞ்சலி செலுத்திய இஸ்ரேலியர்கள்!

ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.

News image
மெளன அஞ்சலி செலுத்தும் இஸ்ரேலியர்கள்
Updated On :7 நவம்பர் 2023, 11:20 am

DIN

இஸ்ரேல் மீது கண்மூடித்தனமாக ஹமாஸ் தாக்குதல் நடத்தி ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில் இஸ்ரேலியர்கள், தாக்குதலில் இறந்தவர்களுக்காக ஒரு நிமிட மெளன அஞ்சலி நிகழ்வை இன்று (நவ.7) கடைப்பிடித்துள்ளனர்.

அக்.7 இஸ்ரேலியர்களின் கலாச்சார நிகழ்வின் ஒரு பகுதியாக கொண்டாட்டத்தில் நகரமே மூழ்கியிருந்த போது எதிர்பாராத தாக்குதலைத் தொடங்கியது ஹமாஸ் பயங்கரவாத குழு.

கடத்தி செல்லப்பவர்களின் புகைப்படங்கள்

கடத்தி செல்லப்பவர்களின் புகைப்படங்கள்

ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் வீடுகளுக்குள் புகுந்து கண்ணில் தென்பட்டவர்களையெல்லாம் கொன்று குவித்தனர்.

அந்தத் தாக்குதலில் 1400-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 242 பேர் பிணைக்கைதிகளாக ஹமாஸால் கடத்திச் செல்லப்பட்டனர்.

தெற்கு இஸ்ரேலில் நடந்த 7 தாக்குதலில் 348 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த நாளின் இழப்பை நினைவுகூரும் வகையில் இஸ்ரேல் டெல் அவிவ் மற்றும் ஜெரூசலேம் நகரங்களில் இந்த ஒரு மாத நினைவு இரங்கல் கூட்டம் கடைப்பிடிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.