அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!ராஜஸ்தானில் மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் பலி! கண்காணிப்பு தீவிரம்!தில்லிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாட மாட்டார்!தேர்தலுக்கிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடர்: மத்திய அரசு மீது திருச்சி சிவா குற்றச்சாட்டுதமிழக தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி மாற்றம்!
/

வடக்கு காஸாவில் மருத்துவமனையைச் சுற்றி இஸ்ரேல் கடும் தாக்குதல்!

வடக்கு காஸாவில் உள்ள மருத்துவமனையைச் சுற்றி இஸ்ரேல் ராணுவம் கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. 

News image

காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்...

Updated On :20 நவம்பர் 2023, 12:32 pm

சுமார் 6,000 பேர் தஞ்சமடைந்துள்ள வடக்கு காஸாவில் உள்ள மருத்துவமனையைச் சுற்றி இஸ்ரேல் ராணுவம் கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. 

கடந்த அக். 7-ஆம் தேதி பாலஸ்தீனத்தின் காஸா முனைப் பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசியும், எல்லை தாண்டியும் திடீா் தாக்குதல் நடத்தினா். இதில் இஸ்ரேலை சோ்ந்த சுமாா் 1,200 போ் உயிரிழந்தனா். மேலும், இஸ்ரேலில் இருந்து சுமாா் 200-க்கும் மேற்பட்டவா்களை பிணைக் கைதிகளாக ஹமாஸ் படையினா் பிடித்துச் சென்றனா். இதைத் தொடா்ந்து, காஸா மீது இஸ்ரேல் கடுமையாகத் தாக்குதல் நடத்தி வருகிறது.

காஸாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் ராணுவம் படிப்படியாக உள்நுழைந்து தீவிர தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இதனால் காஸா நகரம் உருக்குலைந்துள்ளது.

Story image

இந்நிலையில் இன்று(திங்கள்கிழமை) ஆயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் மக்கள் பல வாரங்களாக தஞ்சமடைந்துள்ள வடக்கு காஸாவில் உள்ள மருத்துவமனையைச் சுற்றி இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை நடத்தி வருகிறது. 

ஹமாஸ் தனது போராளிகளை மறைத்து வைப்பதற்கு இந்த இடத்தை பயன்படுத்துவதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது. மேலும், இந்த மருத்துவமனையில் இருந்து 31 குறைமாத குழந்தைகளை சிகிச்சைக்காக உலக சுகாதார அமைப்பு எகிப்துக்கு அனுப்பியுள்ளது. 

Story image

இந்தோனேசியன் மருத்துவமனையில் இரண்டாவது தளத்தில் இன்று நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று காஸா தரப்பு கூறுகிறது. மேலும் வெளியில் இருந்து மருத்துவமனையின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் மருத்துவமனை ஊழியர் தெரிவிக்கிறார். 

அந்த மருத்துவமனையில் சுமார் 600 நோயாளிகள், 200 சுகாதாரப் பணியாளர்கள், தஞ்சமடைந்த மக்கள் என சுமார் 6,000 பேர் அங்கு தஞ்சமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மருத்துவமனையில் இருந்து வெளியே வரும் நபரை இஸ்ரேல் ராணுவம் சுடுவதாகவும் கூறப்படுகிறது. இஸ்ரேல் ராணுவம் மருத்துவமனையை சுற்றி வளைத்துள்ளதால் அங்கிருந்து மக்களை வெளியேற்ற முடியாத சூழ்நிலை நிலவுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.