சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

ஆப்கனில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்! பீதியில் மக்கள்!!

ஆப்கானிஸ்தானில் 30 நிமிடங்களில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

News image
Updated On :7 அக்டோபர் 2023, 9:47 am

DIN

ஆப்கானிஸ்தானில் 30 நிமிடங்களில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

ஆப்கானிஸ்தானின் ஹெராத் பகுதிக்கு வடமேற்கே 40 கிமீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

சனிக்கிழமை பிற்பகல் 12.11, 12.19, 12.42 ஆகிய நேரங்களில் முறையே 6.1, 5.6, 6.2 என ரிக்டர் அளவுகளில் பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து மக்கள் வீட்டைவிட்டு தெருக்களில், சாலைகளில் தஞ்சமடைந்தனர். 

உயிரிழப்புகள், சேதங்கள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. 

முன்னதாக ஆப்கானிஸ்தானில் பைசாபாத் நகரில் கடந்த செப். 4 அன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. 

கடந்த செவ்வாய்க்கிழமை நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் பின்னர் இந்தியாவின் தலைநகர் தில்லி உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.