சிரிய விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்!
பல்வேறு நாடுகளில் உள்ள இஸ்ரேலின் விமானப் படையினர் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது.


சிரியாவில் உள்ள டமாஸ்கஸ் மற்றும் அலெப்போ விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் இன்று (அக். 12) வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
பல்வேறு நாடுகளில் உள்ள இஸ்ரேலின் விமானப் படையினர் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில் ராணுவத்தின் பலத்தை அதிகரிக்க இஸ்ரேல் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
சிரியாவிலுள்ள டமாஸ்கஸ் விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹுசைனி அமீர் அப்துல்லாஹின் வந்த விமானம் அந்த விமான நிலையத்தில் தரையிறங்குவதாக இருந்தது.
இந்தத் தாக்குதலால், அந்த விமானம் ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு திருப்பப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...