அதிர்ஷ்டம் எதிர்பாராத நேரத்தில் சிலருக்குக் கிடைக்கும். ஆனால், அவர்களின் அதுநாள் வரையிலான வாழ்க்கையையே மாற்றும் நிகழ்வாக அது அமைந்துவிடும்.
அப்படியான நிகழ்வு, துபையில் வசிக்கும் தமிழரான மகேஷ்குமார் நடராஜனுக்கு நிகழ்ந்துள்ளது. துபையின் மிகப்பெரிய லாட்டரி குலுக்கலில் ஒன்றான ஃபாஸ்ட்5 கிராண்ட் லாட்டரி பரிசை இவர் வென்றுள்ளார்.
இதில் வென்றவருக்கான பரிசு, அடுத்த 25 ஆண்டுகளுக்கு மாதம் தோறும் 25,000 திராம் (இந்திய மதிப்பில் ரூபாய் 5.6 லட்சம்) வழங்கப்படும்.
ஆம்பூரைச் சேர்ந்த மகேஷ்குமார் 2019-ல் துபைக்கு 4 வருட ஒப்பந்த அடிப்படையில் திட்ட மேலாளாராகப் பணியாற்ற சென்றுள்ளார். துபை சென்ற பிறகு தான் இது போன்ற குலுக்கல் இருப்பது அவருக்கு தெரிய வந்துள்ளது.
இதையும் படிக்க: இந்த வாரம் பிக் பாஸிலிருந்து வெளியேறியது யார்?
பரிசு வென்ற பிறகு மகேஷ்குமார் தெரிவித்தாவது, “என்னுடைய வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களைச் சந்தித்துள்ளேன். என் சமூகத்தைச் சார்ந்த பலர் படிப்பதற்கு உதவி செய்து தான் நான் படித்தேன். இந்தச் சமூகத்திற்கு திருப்பி செய்வதற்கான நேரம் இது. சமூகத்தில் தேவையுள்ளவர்களுக்கு நான் நிச்சயம் இந்தத் தொகையை வைத்து உதவி செய்வேன்” என்று கூறியுள்ளார்.
49 வயதான மகேஷ்குமாருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களது படிப்புக்கு இதனைப் பயன்படுத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எல்ஐகே வசூல் எவ்வளவு?
முந்தி நிற்கும் முதல்வர் வேட்பாளர் ? | MK Stalin | EPS | NTK Seeman | TVK Vijay | TN Election 2026

வளைகுடா நாடுகளின் துறைமுகங்களைத் தாக்குவோம்: ஈரான் எச்சரிக்கை!

பில்லி பிஸ்வாஸின் விநோத வழக்கு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


