டெல் அவிவ்: நவம்பர் மாதத்தில் வெளிநாட்டில் இருந்து இஸ்ரேலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 90 சதவிகிதம் குறைந்துள்ளது என இஸ்ரேலின் மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
காஸாவில் கடந்த அக். 7-ஆம் தேதி முதல் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,248-ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களும், குழந்தைகளும் ஆவர்.
இது தவிர, இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்; 7,600-க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நவம்பர் மாதத்தில் வெளிநாட்டில் இருந்து இஸ்ரேலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 90 சதவிகிதம் குறைந்துள்ளது என இஸ்ரேலின் மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் கடந்த சில வாரங்களாக நடத்திவரும் தாக்குதல் காரணமாக, நவம்பரில் இஸ்ரேலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் 90 சதவிகிதம் குறைந்துள்ளது.
நவம்பர் மாதத்தில் இஸ்ரேலுக்கு 39,000 சுற்றுலாப் பயணிகளின் வருகை தந்துள்ளதாகவும், இது 2022 நவம்பரில் 3,69,800 ஆக இருந்தது. இவர்களில் 42.1 சதவிகிதம் பேர் அமெரிக்காவிலிருந்து வந்தவர்கள்.
இதற்கிடையில், இஸ்ரேலின் மத்திய புள்ளியியல் அலுவலகம் நவம்பர் 2023 இல் வெளிநாடுகளுக்கு சென்ற இஸ்ரேலியர்களின் தரவுகளை வெளியிட்டுள்ளது. அதில், நவம்பர் 2022 முதல் வெளிநாடுகளுக்கு சென்ற இஸ்ரேலியர்களின் எண்ணிக்கையில் 75 சதவிகிதத்திற்கும் அதிகமான அளவில் குறைந்துள்ளது.
இஸ்ரேலியர்கள் 2022 நவம்பரில் 6,45,300 பேர் வெளிநாடுகளுக்கு பயணித்திருந்த நிலையில், 2023 நவம்பரில் 1,48,700 பேர் வெளிநாடுகளுக்கு பயணித்திருப்பதாக இஸ்ரேல் மத்திய புள்ளியியல் அலுவலக தரவுகள் தெரிவித்துள்ளது.