மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

போரைத் துறந்து உதவிக்கரம்! துருக்கி, சிரியாவுக்குச் சென்ற உக்ரைன் வீரர்கள்!

நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள துருக்கி, சிரியா நாடுகளுக்கு உதவுவதற்காக உக்ரைன் போர் வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். 

News image
தெற்கு துருக்கியில் உருக்குலைந்த கட்டடத்தில் மீட்புப் பணிகள்
Updated On :10 பிப்ரவரி 2023, 7:23 am

DIN

நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள துருக்கி, சிரியா நாடுகளுக்கு உதவுவதற்காக உக்ரைன் போர் வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். 

ரஷியாவுடனான போர் சூழல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக உக்ரைன் அரசு அந்நாட்டு வீரர்களை அனுப்பிவைத்துள்ளது. 

சிரியா எல்லையையொட்டிய துருக்கியின் காஸியான்டெப் நகரில் திங்கள்கிழமை ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.8 அலகுகளாகப் பதிவானது. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. 

இதனால், துருக்கியின் தெற்கு மற்றும் மத்திய பகுதியும் சிரியாவின் வடக்குப் பகுதியும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன. இடிபாடுகளில் சிக்கி இதுவரை 21 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 74 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் அந்நாட்டு மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.  துருக்கி, சிரியாவுக்கு உதவும் வகையில் பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டு மீட்புப் படையினரை அனுப்பிவைத்துள்ளனர். 

உக்ரைனில் போர்ச்சூழல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அந்நாட்டு வீரர்களும் நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகளில் ஈடுபடுவதற்காக துருக்கி விரைந்துள்ளனர். 

ரஷியாவுடன் போர் நடைபெற்று வருவதால், அந்நாட்டு வீரர்கள் விழிப்புணர்வுடனேயே செயல்பட்டு வருகின்றனர். எங்களின் உதவி தற்போது துருக்கி, சிரியாவுக்குத் தேவை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மீட்புப் படையைச் சேர்ந்த 88 வீரர்கள் வியாழக்கிழமை இரவு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். 

இது தொடர்பாக பேசிய உக்ரைன் செய்தித்தொடர்பாளர் ஒலேக்சான்ட் கோருன்ஷி, எங்கள் நாட்டில் போர் நடைபெற்று வருகிறது. ஆனால், தற்போது எங்கள் உதவி துருக்கி, சிரியாவுக்குத் தேவைப்படுகிறது. இது இருவருக்கும் பரஸ்பரமானது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.