அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் சுட்டு வீழ்த்தப்பட்ட மர்ம பொருள்!

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவில் வான்வெளியில் பறந்துகொண்டிருந்த மர்ம பொருளை சுட்டு வீழ்த்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ
கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ
Published on
Updated on
1 min read

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவில் வான்வெளியில் பறந்துகொண்டிருந்த மர்ம பொருளை சுட்டு வீழ்த்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கனடாவின் யூகோனில் வான்வெளியில் பறந்த மர்ம பொருளை கனடா, அமெரிக்கா போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தின. கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ உத்தரவின் பேரில் வான்வெளியில் பறந்துகொண்டிருந்த மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தனது சுட்டுரையில் கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ  தெரிவித்திருப்பதாவது:

மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் தொடர்புகொண்டு பேசினேன். தகவலளித்த வடஅமெரிக்க விண்வெளி பாதுகாப்பு அமைப்பிற்கு நன்றி.

மேலும், சுட்டு வீழ்த்தப்பட்ட மர்ம பொருளின் பாகங்களை சேகரித்து கனடா படைகள் ஆய்வு நடத்தும் என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: மேட்டூர் அணை நிலவரம்!

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவின் யூகோனில் வான்வெளியில் பறந்துகொண்டிருந்த மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com