டொனால்ட் டிரம்ப்புக்கு ரூ.136 கோடி அபராதம்

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்புக்கு ரூ.136 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
டொனால்ட் டிரம்ப்புக்கு ரூ.136 கோடி அபராதம்

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு ரூ.136 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், டிரம்ப் வரி எய்ப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் மான்ஹட்டன் நீதிமன்றம் அவருக்கு 1.6 மில்லியன் டாலர்(ரூ.136 கோடி) அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மேலும், 2024ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிட உள்ளார்.

ஏற்கெனவே அதிபராக இருந்த டிரம்ப் கடந்த தேர்தலில் போட்டியிட்டு ஜோ பைடனிடம் தோல்வியடைந்தார். தற்போது மூன்றாவது முறையாக போட்டியிடவுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com