காஸாவுக்குள் படிப்படியாக நுழைந்த இஸ்ரேல் ராணுவம் தற்போது காஸாவை சுற்றிவளைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் கடந்த அக். 7 ஆம் தேதி தொடங்கிய போர் இன்று 28 ஆவது நாளாக நீடித்து வருகிறது. வான்வழித் தாக்குதலை மேற்கொண்டு வந்த இஸ்ரேல் ராணுவம் காஸாவிற்குள் நுழைந்து தரைவழித் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.

இதுவரை இல்லாத அளவுக்கு இஸ்ரேலில் தாக்குதலை மேற்கொண்ட ஹமாஸ் படையினருக்கு பதிலடியாக காஸாவை முற்றிலும் அளிப்பதே நோக்கம் என்று இஸ்ரேல் தீவிரமான தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.
இந்த போரில் பாலஸ்தீனியர்கள் தரப்பில் உயிரிழப்பு 9,061 ஆக அதிகரித்துள்ளது. இதில் 3,760 பேர் குழந்தைகள், 2,326 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | காஸாவிலிருந்து 7,000 பேரை வெளியேற்ற உதவுவதாக எகிப்து அறிவிப்பு
இந்நிலையில் காஸா நகரம் முழுவதையும் சுற்றி வளைத்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இதனால் இஸ்ரேல் தாக்குதலின் தீவிரம் மேலும் அதிகரிக்கலாம் என்று தெரிகிறது.
இஸ்ரேல் தரப்பில் இதுவரை 335 வீரர்கள் உயிரிழந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று காஸாவின் அல்-குவாத் மருத்துவமனை மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஜெனின் அகதிகள் முகாமிலும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நோயற்ற மனிதன்; போரற்ற உலகம்!
வாய்ப்புகள் வழங்கும் ஒப்பந்தம்!

சபலென்காவை சாய்த்தாா் பாப்டிஸ்ட்

டிவிட்டா் முன்னாள் சிஇஓ தொடங்கிய ஏ.ஐ. நிறுவன மதிப்பு 200 கோடி டாலா்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


