பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

மெளன அஞ்சலி செலுத்திய இஸ்ரேலியர்கள்!

ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.

News image

மெளன அஞ்சலி செலுத்தும் இஸ்ரேலியர்கள்

Updated On :7 நவம்பர் 2023, 11:20 am

இஸ்ரேல் மீது கண்மூடித்தனமாக ஹமாஸ் தாக்குதல் நடத்தி ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில் இஸ்ரேலியர்கள், தாக்குதலில் இறந்தவர்களுக்காக ஒரு நிமிட மெளன அஞ்சலி நிகழ்வை இன்று (நவ.7) கடைப்பிடித்துள்ளனர்.

அக்.7 இஸ்ரேலியர்களின் கலாச்சார நிகழ்வின் ஒரு பகுதியாக கொண்டாட்டத்தில் நகரமே மூழ்கியிருந்த போது எதிர்பாராத தாக்குதலைத் தொடங்கியது ஹமாஸ் பயங்கரவாத குழு.

கடத்தி செல்லப்பவர்களின் புகைப்படங்கள்

கடத்தி செல்லப்பவர்களின் புகைப்படங்கள்

ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் வீடுகளுக்குள் புகுந்து கண்ணில் தென்பட்டவர்களையெல்லாம் கொன்று குவித்தனர்.

அந்தத் தாக்குதலில் 1400-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 242 பேர் பிணைக்கைதிகளாக ஹமாஸால் கடத்திச் செல்லப்பட்டனர்.

தெற்கு இஸ்ரேலில் நடந்த 7 தாக்குதலில் 348 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த நாளின் இழப்பை நினைவுகூரும் வகையில் இஸ்ரேல் டெல் அவிவ் மற்றும் ஜெரூசலேம் நகரங்களில் இந்த ஒரு மாத நினைவு இரங்கல் கூட்டம் கடைப்பிடிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.