பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

பிணைக்கைதிகளை விடுவிக்க... : கத்தாரின் கோரிக்கை!

கத்தார் இரு தரப்புக்கிடையே உடன்பாடு ஏற்பட பேச்சுவார்த்தை  நடத்தி வருகிறது.

News image

ஜெபாலியா அகதிகள் முகாம் இடிபாடுகளிடையே சிக்கியவர்களை மீட்கும் பாலஸ்தீனர்கள்

Updated On :2 பிப்ரவரி 2024, 8:51 am IST


கத்தார் அரசு, செவ்வாய்கிழமை (நவ.14) இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இருதரப்பையும் பிணைக்கைதிகளை வெளியிடும் ஒப்பந்தத்திற்கு உடன்படுமாறு வலியுறுத்தியுள்ளது.

கத்தாரின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மஜீத் பின் முகமது அல்-அன்சாரி தோஹாவில் செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது, காஸாவில் நடக்கும் பேரழிவு இருதரப்பிடையே பேச்சுவார்த்தை நடத்த தடையாக உள்ளது.

மேலும் அவர், “இரு தரப்புக்குமிடையே மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைத் தவிர இந்தத் தீவிரமான சூழல் மாற்றமடைய வேறு வழி இல்லை என நாங்கள் நம்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

கத்தார் இரு தரப்புக்கிடையே இடையீட்டாளராகச் செயல்பட்டு வருகிறது. தற்காலிக போர் நிறுத்தத்திற்கும் பிணைக்கைதிகளை வெளிக்கொண்டு வருவதற்கும் பேசிவருகிறது.

திங்கள்கிழமை (நவ.13) அன்று இஸ்ரேலில் இருந்து ஹமாஸ் கடத்தி வந்த பிணைக்கைதிகளில் 100 பெண் மற்றும் குழந்தைகளை விடுதலை செய்வதற்குப் பதிலாக இஸ்ரேல் அரசு, அவர்கள் சிறையில் வைத்துள்ள 200 பாலஸ்தீன குழந்தைகளையும் 75 பெண்களையும் விடுதலை செய்யும் என்கிற கோரிக்கை ஹமாஸிடம் முன்வைக்கப்பட்டது.

ஹமாஸ் ஆயுதப் பிரிவு செய்தித்தொடர்பாளர் அபு ஒபெய்தா பேசும்போது, அதிகபட்சம் 70 பேரை மட்டுமே விடுதலை செய்ய இயலும், அதுவும் இஸ்ரேல் 5 நாள்களுக்குப் போர் நிறுத்தத்திற்கும் காஸா மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் கிடைக்கவும் உடன்பட்டால் மட்டுமே எனத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் இருந்து கொண்டு செல்லப்பட்ட மக்களை வெவ்வெறு குழுவினர் பிணையில் வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இஸ்ரேல், பிணைக்கைதிகள் எல்லோரும் விடுவிக்கப்படும்வரை போர் நிறுத்தம் என்கிற பேச்சுக்கே இடமில்லை எனத் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

ஏற்கெனவே கத்தார் இடையீட்டில் நான்கு பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.