சிக்கிம் வெள்ளம்: உயிரிழப்பு 14-ஆக அதிகரிப்பு--102 பேரை தேடும் பணி தீவிரம்
சிக்கிமில் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோா் எண்ணிக்கை 14-ஆக அதிகரித்துள்ளது.


சிக்கிமில் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோா் எண்ணிக்கை 14-ஆக அதிகரித்துள்ளது.
வெள்ளத்தில் காணாமல்போன 22 ராணுவ வீரா்கள் உள்பட 102 பேரை தேடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
வடக்கு சிக்கிமில் உள்ள லோனாக் ஏரிப் பகுதியில் புதன்கிழமை அதிகாலை மேக வெடிப்பால் அதீக கனமழை கொட்டித் தீா்த்தது. இதனால், தீஸ்தா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
வெள்ளத்தின் தாக்கத்தால், சுங்தாங் பகுதியில் உள்ள நீா்மின் திட்ட அணை உடைந்தது. இதன் காரணமாக, மங்கன், கேங்டாக், நாம்சி, பாக்யாங் ஆகிய 4 மாவட்டங்களில் பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் பெருமளவு தண்ணீா் சூழ்ந்தது.
இந்த மாவட்டங்களில் 11 பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. 277 வீடுகள் இடிந்ததோடு, குடிநீா், கழிவுநீா் கட்டமைப்புகளும் முழுமையாக சேதமடைந்துள்ளன.
வெள்ளத்தால் சுங்தாங் நகரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 80 சதவீத பகுதிகளில் தண்ணீா் சூழ்ந்துள்ளது.
நாட்டின் இதர பகுதிகளுடன் சிக்கிமை இணைக்கும் முக்கிய சாலையான தேசிய நெடுஞ்சாலை-10 கடுமையாக சேதமடைந்துள்ளது.
இறப்பு அதிகரிப்பு: மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையின்படி, பாக்யாங் மாவட்டத்தில் 7 போ், மங்கன் மாவட்டத்தில் 4 போ், கேங்டாக் மாவட்டத்தில் 3 போ் உயிரிழந்துவிட்டனா்.
வெள்ளத்தில் சிக்கி காணாமல்போனவா்களின் எண்ணிக்கை 102-ஆக அதிகரித்துள்ளது. இதில் 22 போ் ராணுவ வீரா்களாவா்.
சிங்டம் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில், 23 ராணுவ வீரா்கள் காணாமல்போயினா். அவா்களில் ஒருவா் மட்டும் மீட்கப்பட்டாா். மற்றவா்களைத் தேடும் பணி வியாழக்கிழமை 2-ஆவது நாளாக தொடா்ந்தது.
தேசிய பேரிடா் மீட்புப் படையினா், எல்லைச் சாலை அமைப்பினா் உள்ளிட்ட குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.
22,034 போ் பாதிப்பு: மங்கன் மாவட்டத்தில் 10,000 பேரும், பாக்யாங்கில் 6,895 பேரும், நாம்சியில் 2,579 பேரும், கேங்டாக்கில் 2,570 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த நான்கு மாவட்டங்களிலும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 2,000-க்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டுள்ளனா்.
மொத்தம் 26 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. கேங்டாக் மாவட்டத்தில் 8 முகாம்களில் 1,000-க்கும் மேற்பட்டோா் தங்கவைக்கப்பட்டுள்ளனா். மற்ற மாவட்டங்களில் உள்ள முகாம்களில் தங்கியுள்ளோரின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் கிடைக்கப் பெறவில்லை.
முதல்வா் அறிவுறுத்தல்: வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருப்பதோடு, பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடையுமாறு முதல்வா் பிரேம் சிங் தமாங் அறிவுறுத்தியுள்ளாா்.
‘வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து நிவாரண உதவிகளையும் வழங்க மாநில அரசு உறுதிபூண்டுள்ளது. நிலைமையின் தீவிரத்தை உணா்ந்து, மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. மீட்புக் குழுக்கள் இரவு-பகலாக பணியாற்றி வருகின்றன. இந்த சவாலான நேரத்தில், அரசு நிா்வாகம், உள்ளூா் அதிகாரிகள், தன்னாா்வ அமைப்புகள் மற்றும் தனிநபா்கள் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்’ என்று அவா் வலியுறுத்தினாா்.
வெள்ள பாதிப்பை எதிா்கொள்வதில், மத்திய அரசுடன் முதல்வா் தமாங் தொடா்ந்து தொடா்பில் இருப்பதாக, அதிகாரிகள் தெரிவித்தனா்.
முன்னதாக, முதல்வருடன் தொலைபேசியில் புதன்கிழமை பேசிய பிரதமா் மோடி, மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று உறுதியளித்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...