கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

கைகளில் மனித சாம்பலுடன் இஸ்ரேல் மீட்புப் படை!

இஸ்ரேலில் இடிபாடுகளுக்கு மத்தியில் கைகளில் மனித சாம்பலுடன் மீட்புப் படையினர் வெளிவரும் புகைப்படத்தை அந்நாட்டு பாதுகாப்புப் படை பகிர்ந்துள்ளது.

News image
Updated On :20 அக்டோபர் 2023, 3:45 pm

DIN


இஸ்ரேலில் இடிபாடுகளுக்கு மத்தியில் கைகளில் மனித சாம்பலுடன் மீட்புப் படையினர் வெளிவரும் புகைப்படத்தை அந்நாட்டு பாதுகாப்புப் படை பகிர்ந்துள்ளது.

இஸ்ரேல் மீதான தாக்குதலில் உயிரிழந்தவர்களை மீட்கும் பணிகளில் மீட்புப் படையினரும், தன்னார்வர்களும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே இஸ்ரேல் பாதுகாப்புப் படை பகிர்ந்துள்ள இப்படம், பலரால் பகிரப்பட்டு வருகிறது.

பாலஸ்தீன ஆதரவு பெற்ற ஹமாஸ் - இஸ்ரேல் படைகளுக்கு இடையிலான போர் 14வது நாளான தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற போரில் இஸ்ரேல் தாக்குதலால் 3,478 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 12,065 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். 

இதேபோன்று ஹமாஸ் படையினரின் தாக்குதலால், இஸ்ரேலில் 1,400 பேர் பலியானதாகவும், 3,800க்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. 

இஸ்ரேலில் தொடர் குண்டு வெடிப்பில் கட்டட இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் ஸாகா எனும் மீட்புப் படை நிறுவனத்துடன் சேர்ந்து பல தன்னார்வர்களும் ஈடுபட்டு வருகின்றனர். அதில், கூப்பிய கைகளில் மனித சாம்பலுடன் மீட்புப் படையைச் சேர்ந்த தன்னார்வலர் வெளியே வரும் புகைப்படத்தை இஸ்ரேல் பாதுகாப்புப் படை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது. மேலும், தெற்கு இஸ்ரேல் இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் உடல்கலை மீட்கும் பணிகள் தொடர்ந்து இன்றும் நடைபெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.