

இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணமான மேற்கு பப்புவாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்ட தகவலில்,
ஜகார்த்தா நேரப்படி காலை 7.2 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவானதாகத் தெரிவித்துள்ளது.
ரான்சிகி நகருக்கு தென்கிழக்கே 46 கி.மி தொலைவிலும், கடலுக்கு அடியில் 11 கி.மீ ஆழத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
சுனாமி எச்சரிக்கை எதுவும் இதுவரை வெளியிடவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.