பாரிஸ்: காஸா துயரத்தைப் பிரதிபலிக்கும் புகைப்படம் 'வேல்ர்ட் பிரஸ்' புகைப்பட அறக்கட்டளையால் இந்த ஆண்டுக்கான சிறந்த படமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புகைப்படத்தை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன புகைப்படக் கலைஞர் முகமது சலீம் கடந்த அக். 17-இல் எடுத்துள்ளார்.
அந்தப் படத்தில், காஸாவின் கான் யூனிஸ் நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் தாயுடன் உயிரிழந்த குழந்தையின் உடலை அவரது உறவினர் சோகத்துடன் ஏந்தியிருக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.
அந்தப் படம், காஸா போரின் பாதிப்பை ஆணித்தரமாக வெளிப்படுத்துவதாக விருதுக்கான தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.