அமெரிக்காவில் ஓட்டுநர் இல்லாமல் கனரக வாகனங்களை இயக்கும் சோதனை முயற்சி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளது.
இதன் விளைவாக கூடிய விரைவில் அமெரிக்காவில் சரக்குகளை ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்கள் ஓட்டுநர் இன்றி இயக்கப்படும்.
நீண்ட தொலைவுகளுக்கு சரக்கு ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்களை தானியங்கி முறையில் இயக்குவதன் மூலம் பெருமளவில் எரிபொருள் மிச்சப்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தின் பிட்ஸ்பர்க் பகுதியில் தானியங்கி லாரிகள் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. பிட்ஸ்பர்க் பகுதியைச் சேர்ந்த அரோரா இன்னோவேஷன் என்ற நிறுவனம் ஓட்டுநர் இல்லாமல் தானியங்கி முறையில் கனரக வாகனங்களை இயக்கும் சோதனையில் இறங்கியது.
அதன்படி, 80 ஆயிரம் பவுன்ட் எடை கொண்ட கனரக வாகனத்தை (லாரி) நெடுஞ்சாலைகளில் 65 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கி அந்நிறுவனம் சோதனை செய்து வெற்றி கண்டுள்ளது.
ஆற்றங்கரையையொட்டி பயணிக்கும் மூன்றுவழிச் சாலையில் இச்சோதனை செய்யப்பட்டது. முழுக்க முழுக்க ரேடார், கேமரா சென்சார், 25 லேசர் மூலம் தானியங்கி முறை சாத்தியப்படுத்தப்பட்டுள்ளது.
இதில், 400 மீட்டருக்கு முன்பு வாகனங்கள் அல்லது ஏதேனும் தடுப்பு தென்பட்டால், கனரக வாகனம் தானாக மாற்று பாதையை தேர்வுசெய்துகொள்ளும். நெடுஞ்சாலைகளில் உள்ள மூன்றுவழிச் சாலைகளில் வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டுள்ளது.

தலாஸ் முதல் ஹுஸ்டன் வரை 20 தானியங்கி கனரக வாகனங்கள் முதல்கட்டமாக இயக்கப்பட்டன. ஒவ்வொரு வாகனத்திலும் ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் உடன் ஒரு நபரும் அனுப்பப்பட்டனர். இந்த சோதனை முயற்சியும் வெற்றி பெற்றுள்ளது.

கனரக வாகனங்களை தானியங்கி முறையில் இயக்குவதால், பெருமளவு எரிபொருள் சேமிக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் தானியங்கி முறையில் கனரக வாகனங்களை இயக்குவதன் பாதுகாப்புத்தன்மை குறித்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 66 சதவிகிதத்தினர் எதிர்மறையாக வாக்களித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரியலூரில் அதிவேகமாக கனரக வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை!

சுங்கச்சாவடி கட்டணத்தை தவிா்க்க கிராமப்புற சாலைகளில் செல்லும் கனரக வாகனங்கள்

தானியங்கி பட்டா மாறுதல் எளிமையாகிறது: புதிய மென்பொருள் கட்டமைப்பு அமல்

அக்டோபருக்குள் தடையற்ற சுங்கவரி வசூல் முறை: கூடுதல் அதிகாரம் கேட்டு மாநகராட்சி கூட்டத்தில் தீா்மானம்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



