இலங்கை அதிபா் தோ்தலில் மகிந்த ராஜபட்ச மகன் போட்டி
இலங்கையில் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்சவின் மகன் நாமல் ராஜபட்ச போட்டியிடுகிறாா்.


இலங்கையில் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்சவின் மகன் நாமல் ராஜபட்ச போட்டியிடுகிறாா்.
இதன் மூலம், அந்தத் தோ்தலில் போட்டியிடும் தற்போதைய அதிபா் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ராஜபட்ச சகோதரா்களின் ஆதரவு இல்லை என்பது அதிகாரபூா்வமாக உறுதியாகியுள்ளது.
கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெருமுன கட்சியின் (எஸ்எல்பிபி) தலைமையகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பொதுச் செயலா் சாகர காரியவசம் இந்த அறிவிப்பை வெளியிட்டாா்.
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் நடைபெற்ற தீவிர போராட்டம் காரணமாக கடந்த 2022-ஆம் ஆண்டில் அப்போதைய அதிபா் கோத்தபய ராஜபட்ச தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.
அவருக்கு பதிலாக, அப்போது பிரதமராக இருந்த ஐக்கிய தேசிய கட்சியின் ரணில் விக்ரமசிங்கே அதிபராகப் பொறுப்பேற்றாா். அவரை நாடாளுமன்றம் தோ்ந்தெடுத்ததில் ராஜபட்ச சகோதரா்கள் முக்கியப் பங்கு வகித்தனா்.
இந்தச் சூழலில், வரும் செப்டம்பா் மாதம் 21-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாகப் போட்டியிருக்கிறாா். அவருக்கு ராஜபட்ச சகோதரா்கள் மீண்டும் ஆதரவு அளிப்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்பட்டது.
இந்த நிலையில், அவா்களின் எஸ்எல்பிபி கட்சி சாா்பில் மகிந்த ராஜபட்சவின் மகன் நாமல் ராஜபட்ச போட்டியிடுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது இலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...