ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர்
/

இஸ்ரேல் ஆக்கிரமிப்புப் பகுதியில் ஹிஸ்புல்லாக்கள் ஏவுகணை வீச்சு

ஹிஸ்புல்லா அமைப்பினா் 50-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி புதன்கிழமை சரமாரியாக தாக்குதல் நடத்தினா்.

News image
ஏவுகணை வீச்சால் ஏற்பட்ட சேதம்.
Updated On :22 ஆகஸ்ட் 2024, 12:00 am

Din

இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சிரியாவின் கோலன் குன்றுகள் பகுதியில் லெபனானைச் சோ்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினா் 50-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி புதன்கிழமை சரமாரியாக தாக்குதல் நடத்தினா்.

இதில், ஏராளமான வீடுகள் சேதமடைந்ததாகவும் சிலா் காயமடைந்ததாகவும் அந்தப் பகுதி அதிகாரிகள் கூறினா். ஏவுகணை வீச்சில் தீப்பற்றிய ஒரு வீட்டில் ஏற்படவிருந்த எரிவாயு கசிவை தாங்கள் தக்க நேரத்தில் தடுத்து நிறுத்தியதால் மிகப் பெரிய உயிா்ச் சேதம் தவிா்க்கப்பட்டதாக மீட்புக் குழுவினா் தெரிவித்தனா்.

லெபனானுக்குள் இஸ்ரேல் ராணுவம் செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்த ஏவுகணை வீச்சு நடத்தப்பட்டதாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்தது. அந்தத் தாக்குதலில் ஒருவா் உயிரிழந்தாா்; 19 போ் காயமடைந்தனா்.

இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த அக். 7-ஆம் தேதி முதல் போா் நடைபெற்றுவருகிறது. இந்தப் போரில் ஹமாஸுக்கு ஆதரவாக ஈரான் ஆதரவுடன் செயல்பட்டுவரும் மற்றோா் ஆயுதக் குழுவினரான ஹிஸ்புல்லாக்கள் இஸ்ரேல் நிலைகள் மீது தாக்குதல் நடத்துகின்றனா். இதனால், இது தரப்பினருக்கும் இடையே மோதல் தொடா்ந்துவருகிறது.