டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கனடா: ஒரே வாரத்தில் 2 இந்தியர்கள் கொலை!

ஒரே வாரத்தில் இரண்டு இந்தியர்கள் கொலை செய்யப்பட்டிருப்பது, அங்கு வாழும் இந்தியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :8 டிசம்பர் 2024, 11:13 am

DIN

கனடாவில் ஒரே வாரத்தில் இரண்டு இந்தியர்கள் கொலை செய்யப்பட்டிருப்பது, அங்கு வாழும் இந்தியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் எட்மண்டனில் வெள்ளிக்கிழமை (டிச. 6) அதிகாலை 1 மணியளவில் 107-வது அவென்யூ பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் காவலராக பணிபுரிந்து வந்த ஹர்ஷன்தீப் சிங் (20) என்பவரை இருவர் தாக்கியுள்ளனர். மேலும், ஹர்ஷன்தீப்பை துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட பின்னர், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதனைத் தொடர்ந்து, ஹர்ஷன்தீப்புக்கு முதலுதவி செய்து, அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்; இருப்பினும், ஹர்ஷன்தீப் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், ஹர்ஷன்தீப் மீது தாக்குதல் நடத்திய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கொலைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை; கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஹர்ஷன்தீப்பை படிக்கட்டில் தள்ளி, பின்னிருந்து அவரின் முதுகில் துப்பாக்கில் சுடும் விடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

முன்னதாக, கனடாவில் டிசம்பர் 1 ஆம் தேதியில் வணிக மேலாண்மையில் முதலாண்டு படித்து வந்த குராஸிஸ் சிங் (22) என்பவருக்கும், அவருடன் ஒன்றாக வசித்து வந்த கிராஸ்லி ஹண்டருக்கும் இடையிலான வாக்குவாதத்தில், குராஸிஸ் சிங் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

ஒரே வாரத்தில் இரண்டு இந்தியர்கள் கொலை செய்யப்பட்டிருப்பது, கனடாவில் தங்கியிருக்கும் இந்தியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.