ஆப்கானிஸ்தானில் உள்ள வீடுகளில் பெண்கள் புழங்கும் இடங்களில் ஜன்னல்கள் வைப்பதற்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் பணியில் இருந்து நேட்டோ படைகள் கடந்த 2021 இல் வெளியேறிய பிறகு தலிபான் படைகள் ஆட்சியைக் கைப்பற்றியது.
முன்பை போன்ற ஆட்சி முறை தற்போது இருக்காது என்றும், பெண்களுக்கு உரிமை வழங்கப்படும் என்றும் தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்றபோது தெரிவித்திருந்தனர்.
ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் பள்ளி, கல்லூரி செல்வதற்கும், பணி புரிவதற்கும் தடை விதித்து தலிபான்கள் உத்தரவிட்டனர். பெண்களுக்கான பேச்சு சுதந்திரம் முழுமையாக பறிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : பாகிஸ்தான் எல்லையில் தலிபான்கள் தொடா் தாக்குதல்
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் புதிதாக வீடு கட்டுபவர்கள் பெண்கள் அதிகம் புழங்கும் சமையல் அறை, வீட்டின் முற்றம் உள்ளிட்ட பகுதிகளில் ஜன்னல்கள் வைக்க தடை விதித்துள்ளனர்.
மேலும், ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள வீடுகளில் குறிப்பிட்ட இடங்களில் ஜன்னல்கள் இருந்தால் சுவர் எழுப்பவும் அல்லது மறைக்கவும் தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.
அதேபோல், அண்டை வீட்டின் கிணற்றுப் பகுதி தெரியும் வகையில் இருக்கும் ஜன்னல்களையும் அகற்ற உத்தரவிட்டுள்ளனர்.
இதன்மூலம் பெண்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்றும், தேவையில்லாத பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்புகள் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் பல்வேறு வகையில் பெண்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுப் புட்டிகளுக்கு கூடுதலாக ரூ.10 வசூல் நடைமுறைக்கு சாத்தியமில்லை: அமைச்சா் விக்னேஷ்
காவிரி பிரச்னை மோசமடைய திமுகதான் காரணம்: அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல் குமாா்

பாலியல் சீண்டல்: பெண்கள் கிரிக்கெட் அணி பயிற்சியாளர், மேலாளருக்கு வாழ்நாள் தடை!

அரசு தொகுப்பு வீடுகளில் வசிப்பவா்களுக்கு பட்டா வழங்கக் கோரிக்கை
விடியோக்கள்

மேக்கேதாட்டு அணை; முதல்வர் தெளிவாக இருக்கிறார்!: அமைச்சர் செங்கோட்டையன் | TVK | NEET


