சென்னையில் தவெக அரசின் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது!தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படைதில்லி செங்கோட்டை குண்டுவெடிப்புக்கு அல்-கொய்தாவே காரணம்: ஐ.நா.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு!சென்னை பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ: டெண்டர் வெளியீடுஅதிமுகவிலிருந்து கொள்கைப் பரப்பு துணை செயலர் அப்சரா ரெட்டி விலகல்! தமிழக அரசு பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்: கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்!‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

சீட் பெல்ட் அணியாவிட்டால்...: அமெரிக்க விமான நிகழ்வு சொல்லும் செய்தி

போதுமான பரிசோதனைக்குப் பிறகே விமானங்களை இயங்க அனுமதிக்கப்பட்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News image

உடைந்து விழுந்த விமானத்தின் ஜன்னல் பகுதி | AP

Updated On :7 பிப்ரவரி 2024, 8:53 pm IST

போயிங் 737 மேக்ஸ் 9 வகை விமானத்தின் ஜன்னல் கதவு நடுவானில் தெறித்து விழுந்த சம்பவத்தைத் தொடர்ந்து அதே வகையிலான விமானங்களை உடனடியாக தரையிறக்க அமெரிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

போதுமான பரிசோதனைக்குப் பிறகே அவற்றை இயங்க அனுமதிக்கப்பட்டும் என தெரிவித்துள்ளனர். ஒரு விமானத்தைப் பரிசோதிக்க 4 முதல் 8 மணி நேரம் ஆகலாம். கிட்டதட்ட 171 விமானங்கள் உலகம் முழுவதும் உள்ளன.

பாதிப்புக்குள்ளான விமானத்தை இயக்கிய அலாஸ்கா விமான சேவை நிறுவனம், போயிங் 65 737 மேக்ஸ்-9 வகையைச் சேர்ந்த  18 விமானங்கள் குழுவினரால் பரிசோதிக்கப்பட்டதாகவும் மீதமுள்ள விமானங்கள் சில நாட்களில் பரிசோதனை முடிவடையும் எனவும் தெரிவித்துள்ளது.

ஓரேகான் பகுதியில் இருந்து கலிபோர்னியாவுக்கு வெள்ளிக்கிழமை புறப்பட்ட போயிங் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தின் ஜன்னல் கதவு தெறித்து விழுந்தது.

உயிரிழப்போ காயமோ எதுவும் ஏற்படவில்லை எனினும் பயணிகளில் சிலர் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

16 ஆயிரம் அடி உயரத்தில் நடந்த இந்தச் சம்பவத்தால் விமானத்துக்குள் இருந்த அலைபேசி உள்ளிட்ட பொருள்கள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. ஜன்னலோரத்தில் பயணிகள் யாரும் அமர்ந்திருக்கவில்லை. இருக்கையில் அமர்ந்திருந்த சிறுவனை காற்று இழுத்தபோதும் இருக்கையோடு சீட் பெல்ட்டால் பிணைக்கப்பட்டிருந்ததால் விபரீதம் தவிர்க்கப்பட்டது.

“ஒருவேளை ஜன்னல் அருகே உள்ள இருக்கைகளில் யாரேனும் இருந்திருந்தாலோ அல்லது அந்த இருக்கைக்கு அருகில் சீட் பெல்ட் அணிந்திருக்காவிட்டாலோ இந்தச் சம்பவம் வேறு மாதிரியானதாக முடிந்திருக்கும்” என்கிறார் வான்வழி பாதுகாப்பு துறை பேராசிரியர் அந்தோனி பிரிக்ஹவுஸ்.

போயிங் 737 விமானங்களில் மேக்ஸ் வகை, இரட்டை இன்ஜின் கொண்ட விமானங்கள் புதியவை. அமெரிக்காவில் பயணிகள் போக்குவரத்தில் அதிகளவில் இவை பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.