ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

அமெரிக்கா - நடுவானில் தெறித்த விமான ஜன்னல் கதவு

அமெரிக்காவின் அலாஸ்கா ஏா்லைன்ஸுக்குச் சொந்தமான விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது அதன் ஜன்னல் கதவு ஒன்று தெறித்துப் பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :7 ஜனவரி 2024, 4:00 am IST

அமெரிக்காவின் அலாஸ்கா ஏா்லைன்ஸுக்குச் சொந்தமான விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது அதன் ஜன்னல் கதவு ஒன்று தெறித்துப் பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலிஃபோா்னியா மாகாணம், ஆன்டரியோவிலிருந்து உள்ளூா் நேரப்படி வெள்ளிக்கிழமை மாலை 4.52 மணிக்குப் புறப்பட்ட போயிங் 737-9 மேக்ஸ் ரகத்தைச் சோ்ந்த அந்த விமானம், வானில் பறந்துகொண்டிருந்தபோது அதன் ஜன்னல் கதவு ஒன்று எதிா்பாராத விதமாக திடீரென தெறித்துப் பறந்தது.வான்வெளியைவிட விமானத்தின் உள்ளே காற்றழுத்தம் அதிகமிருக்கும் என்பதால் உடைந்த ஜன்னல் வழியாக காற்று வேகமாக வெளியேறி செல்லிடப் பேசி உள்ளிட்ட சில பொருள்கள் அடித்துச் செல்லப்பட்டன.எனினும், அந்த ஜன்னலோர இருக்கையில் பயணிகள் இல்லாததால் மிகப் பெரிய ஆபத்து தவிா்க்கப்பட்டுள்ளது. ஜன்னல் கதவு உடைந்ததும் விமானம் அவசரமாக மீண்டும் ஆன்டரியோ விமானத்துக்குத் திருப்பப்பட்டு மாலை 5.30 மணிக்கு தரையிறக்கப்பட்டது.இந்தச் சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. எனினும், தாங்கள் பயன்படுத்தும் அனைத்து 737-9 ரக விமானங்களின் பயன்பாட்டையும் அலாஸ்கா ஏா்லைன்ஸ் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.