பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

காஸாவில் மருத்துவமனை மீது தாக்குதல் -குழந்தைகள் உள்பட 30 பேர் பலி!

காஸாவில் மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் -குழந்தைகள் உள்பட 30 பேர் பலி!

News image
காஸாவில் தாக்குதலில் காயமடைந்த குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் காட்சி- படம் | ஏபி
Updated On :27 ஜூலை 2024, 10:48 am

DIN

காஸாவில் டெயிர் அல்-பாலா பகுதியில் அமைந்துள்ள மருந்துவமனை மீது இஸ்ரேல் படைகள் சனிக்கிழமை(ஜூலை 27) நிகழ்த்திய வான்வழித் தாக்குதல்களில் குழந்தைகள் உள்பட குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டிருப்பதாக காஸா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த கொடூர தாக்குதல்களில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் பலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கான் யூனிஸ் சிட்டி அருகேயுள்ள அபாசன் நகரில் குடியிருப்புப் பகுதிகள் மீதான இஸ்ரேல் படைகளின் தாக்குதல்களில் 15 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், பானி சுஹைலா நகரில் நிகழ்த்தப்பட்டுள்ள தாக்குதல்களில் இருவர் கொல்லப்பட்டிருப்பதாகவும், போரால் இடம்பெயர்ந்து மத்திய கான் யூனிஸ் பகுதியில் தங்கியுள்ள பாலஸ்தீன மக்களின் கூடாரங்களில் நிகழ்த்தப்பட்டுள்ள தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸாவில் சனிக்கிழமை(ஜூலை 27) இஸ்ரேல் படைகள் நிகழ்த்திய தாக்குதல்களில் 48 பேர் கொல்லப்பட்டிருப்பதாகக் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.