சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 3 பத்திரிகையாளர்கள் உள்பட 11 பேர் கொலை!

இஸ்ரேலின் தாக்குதல்களில் காஸாவில் 3 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டது குறித்து...

News image
இஸ்ரேலின் தாக்குதல்களில் ஒரே நாளில் 11 பேர் கொலை...- AP
Updated On :21 ஜனவரி 2026, 4:50 pm

இணையதளச் செய்திப் பிரிவு

இஸ்ரேலின் தாக்குதல்களில், ஒரே நாளில் 3 பத்திரிகையாளர்கள், 2 சிறுவர்கள் உள்பட 11 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸாவின் புரைஜ் அகதிகள் முகாம், ஸாஹ்ரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் இன்று (ஜன. 21) ட்ரோன் தாக்குதல்கள் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல்களில், 2 சிறுவர்கள் உள்பட 11 பேர் கொல்லப்பட்டனர்.

இதில், கொல்லப்பட்ட 13 வயது சிறுவனின் தாய் கூறுகையில், காலையில் அவர் பசியுடன் விறகுகள் சேகரிக்கச் சென்றதாகவும், விரைவில் திரும்பி வருகிறேன் எனக் கூறியதாகவும் கண்ணீருடன் தெரிவித்துள்ளது அனைவரையும் கலங்கச் செய்கின்றது.

மத்திய நகரமான ஸாஹ்ராவில் எகிப்து அரசு தலைமையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாமை படம் பிடித்துக் கொண்டிருந்த பத்திரிகையாளர்களின் வாகனம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில், பத்திரிகையாளர்கள் மூவரும் கொல்லப்பட்டனர்.

இதேபோல், முவாஸி பகுதியில் பெண் ஒருவர் இஸ்ரேல் படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், புரைஜ் முகாமில் நடைபெற்ற ஷெல் தாக்குதல்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, இஸ்ரேல் அரசு கூறுகையில், மத்திய காஸா பகுதியில், தங்களது படைகளை அச்சுறுத்தும் வகையில் ட்ரோனை இயக்கிய நபர்கள் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அக். 10 அன்று இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டது. ஆனால், போர்நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் மட்டும் இதுவரை 470 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.