கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஐக்கிய பேரரசின் மன்னருக்கு ரூ. 4 கோடிக்கு விருந்து ஏற்பாடு செய்த பிரான்ஸ்!

உலகத்தரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்து

News image

கோப்புப் படம்

Updated On :31 ஜூலை 2024, 6:48 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஐக்கிய பேரரசின் மன்னர் சார்லஸ் ரூ. 4 கோடிக்கு விருந்து ஏற்பாடு செய்த பிரான்ஸ் அதிபர் இமானுவெல் மக்ரோன்.

2022ஆம் ஆண்டு இரண்டாம் எலிசபெத் மறைவிற்கு பிறகு, மன்னர் சார்லஸ் பதவியேற்றார். இவர், கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் ஐக்கிய பேரரசுக்கும் பிரான்ஸுக்கும் இடையே நல்லுறவினை ஏற்படுத்துவதற்காக பிரான்ஸ் சென்றிருந்தார்.

மன்னரை வரவேற்பதற்காக வெர்செய்ல்ஸ் மாளிகையில் பிரான்ஸ் அதிபர் இமானுவெல் மக்ரோன் விருந்து ஏற்பாடு செய்திருந்தார்.

விருந்தில் அரிய வகை பிரெஞ்சு கல் இறால்கள், நண்டுகள், ஷாம்பெயின் என்ற உயர்வகை மதுவில் சமைக்கப்பட்ட இறைச்சிகள் மற்றும் கிரேட்டின் முறையில் சமைக்கப்பட்ட பிரெஞ்சு காளான்கள் போன்ற உயர்தரத்திலான உணவுவகைகள் இடம்பெற்றிருந்தன.

அதுமட்டுமின்றி, பல்வேறு வகையான விண்டேஜ் ஒயின்கள், உயர்வகை ஷாம்பெயின் மற்றும் உலகளவிலான தரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சீஸ்கள் முதலானவையும், இனிப்புகளில் லிச்சி பிரெஞ்சு மாக்ரூன்கள், ரோஜா மற்றும் ராஸ்பெர்ரி சொர்பெத் போன்றவையும் இடம்பெற்றிருந்தன.

ஆங்கில நடிகர் ஹக் கிராண்ட், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கால்பந்து அணியின் மேலாளர் அர்சென் வெங்கர் மற்றும் மிக் ஜாகர் போன்ற பிரபல நட்சத்திரங்கள் உள்பட சுமார் 150 பேர் இந்த விருந்தில் பங்கேற்றிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, மன்னர் வருகையின்போது ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தின் மொத்த செலவுகளைக் கணக்கிட்டனர். வெளிவந்த தரவுகளின்படி, விருந்திற்காக சுமார் ரூ. 4.2 கோடி வரையில் செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவற்றில் ரூ. 1.4 கோடி உணவுக்காகவும் மற்றும் ரூ. 38 லட்சம் பானங்களுக்காகவும் செலவு செய்யப்பட்டுள்ளது.

விருந்தில் பேசிய மன்னர் சார்லஸ், ``பிரான்சில் எனது தாயாரான மறைந்த ராணிக்கு வழங்கப்பட்ட அஞ்சலி மூலம் நானும் எனது குடும்பத்தினரும் பெரிதும் ஈர்க்கப்பட்டதன் மூலம் அதிபர் மக்ரோனின் தாராள மனப்பான்மையை அறிகிறோம்’’ என்று தெரிவித்திருந்தார்.

இருப்பினும், பிரெஞ்சு அரசு ஏற்கெனவே இதுபோன்று ஆடம்பர விருந்து அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது; இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு 2023ஆம் ஆண்டில் லூவர் அருங்காட்சியகத்தில் ரூ. 3.7 கோடி செலவில் விருந்தளித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.