கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

இந்திய மருத்துவ மாணவர்களுக்கு ரஷியாவில் நேர்ந்த சோகம்!

சக மாணவியை காப்பாற்ற சென்று நீரில் மூழ்கிய 4 மாணவர்கள்

மாதிரி படம் - ENS

Published On :

ரஷியாவில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த மகாராஷ்டிர மாநிலம் ஜல்கெளனை சேர்ந்த 4 மாணவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததாக இந்திய-ரஷிய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர்.

ஜூன் 6-ம் தேதி யரோஸ்லாவ்-தி-வைஸ் நோவ்கோரோட் பல்கலைக்கழகம் அமைந்துள்ள வெலிகி நோவ்கோரோட் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஹர்சல் ஏ. தேசால், சகோதரர்கள் ஜிஷன் ஏ. பின்ஜாரி, ஜியா பி. பின்ஜாரி மற்றும் மாலிக் குலாம்கெளஸ் முகமது யாகூப் ஆகிய நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

அதிகாரிகள் அளிக்கும் தகவல்படி, மாணவி உள்பட 5 பேரும் ஆற்றுக் கரையோரத்தில் மாலையில் நடை சென்றுள்ளனர்.

அப்போது நிஷா பி. சோனாவானே என்கிற மாணவி ஆற்றில் தவறி விழவே அவரை மீட்க மீதமுள்ள நால்வரும் ஆற்றில் இறங்கியதாக தெரிகிறது. மாணவி உயிர் பிழைத்தபோதும் நால்வரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.

இருவரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் 100 கிமீ தொலைவு அளவுக்கு ஆற்றுப்பகுதிகளில் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரஷியாவுக்கான இந்திய தூதர் பல்கலைக்கழகத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் விரைவில் மாணவர்களின் உடல்கள் ஜல்கெளனுக்கு கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.