ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

குவைத் தீவிபத்து: சிகிச்சையில் உள்ள இந்தியர்களை சந்தித்த தூதரக அதிகாரி!

குவைத் தீவிபத்தில் காயமுற்ற தொழிலாளர்களுக்கு தூதரகம் முழு உதவி: வெளியுறவுத்துறை அமைச்சகம்

News image
காயமுற்றவர்களை சந்திக்கும் தூதரக அதிகாரி
Updated On :12 ஜூன் 2024, 10:43 am

DIN

குவைத் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட இந்திய தொழிலாளர்களுக்கு வேண்டிய உதவிகளை தூதரகம் மேற்கொள்ளும் என அதன் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தீவிபத்தில் காயமுற்று அல்-அடான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை தூதரக அதிகாரி ஆதர்ஷ் ஸ்வைகா சென்று சந்தித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் பகிர்ந்துள்ள எக்ஸ் பதிவில், “குவைத் நகரில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன். 40 பேர் இறந்துள்ளதாகவும் 50-க்கும் மேலான நபர்கள் மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன” எனத் தெரிவித்த அவர், இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான முழு உதவிகளையும் தூதரகம் செய்துதரும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.