பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ரஷிய வழிபாட்டுத் தல தாக்குதல்: மேலும் ஒரு காவலா் உயிரிழப்பு

ரஷியாவில் பயங்கரவாத தாக்குதலில் மேலும் ஒரு காவலா் உயிரிழப்பு

News image
பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு மகாச்காலா நகரில் அஞ்சலி செலுத்தும் பொதுமக்கள்.
Updated On :25 ஜூன் 2024, 8:28 pm

Din

மாஸ்கோ: ரஷியாவில் டகிஸ்தான் தன்னாட்சிப் பிரதேசத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் மேலும் ஒரு காவலா் உயிரிழந்தாா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

டகிஸ்தான் தலைநகா் மகாச்காலாவில் காவல் சாவடி மீது பயஙகரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மேலும் ஒரு காவலா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இத்துடன் மகாச்காவாவிலும், டொ்பென்ட் நகரிலும் இரு கிறிஸ்தவ தேவாலயங்கள், இரு யூத வழிபாட்டுத் தலங்கள், காவல் சாவடி மீது பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 21-ஆக உயா்ந்துள்ளது. அவா்களில் 16 போ் காவலா்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட 6 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது. முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட டகிஸ்தான் பகுதியில் ஏற்கெனவே மதவாத குழுவினருக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல்கள் நடைபெற்றுள்ளன.

இந்தச் சூழலில், காஸா போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.