பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

பட்டினி இஸ்ரேலின் ஆயுதமா? நிவாரண உதவிகளில் நீடிக்கும் சிக்கல்!

காஸாவில் நுழைந்த நிவாரண டிரக்குகள்: இஸ்ரேலின் நீடிக்கும் நிவாரண உதவி சோதனை

News image

இலவச உணவுக்காகக் காத்திருக்கும் பாலஸ்தீன மக்கள் - AP

Updated On :13 மார்ச் 2024, 4:18 pm IST

நிவாரண பொருள்கள் ஏற்றப்பட்ட 6 டிரக்குகள் காஸாவுக்குள் முதன்முறையாக போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு பகுதியில் நுழைவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

உலக உணவுத் திட்டத்தின் கீழ் பொருள்களை ஏற்றிவரும் 6 டிரக்குகள் எல்லை வேலியைத் தாண்டி காஸாவுக்குள் நுழைந்தன.

சோதனை ஓட்டமாக இந்த வழி கருதப்படுவதாகவும் இஸ்ரேல் இதன் விளைவுகளை ஆராயும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேல், ஹமாஸ் இந்த நிவாரண உதவிகளுக்கு கட்டளையிடுவதாக கூறியது. அதே நேரத்தில் சர்வதேச அளவில் காஸா மக்களுக்கு நிவாரணம் கிடைக்க இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக காஸாவின் வடக்குப் பிராந்தியத்துக்கு உதவி கிடைக்க கோரிக்கைகள் எழுந்தவண்ணம் உள்ளன.

ஓபன் ஆர்ம்ஸ் நிவாரண குழுவின் கப்பல்

ஓபன் ஆர்ம்ஸ் நிவாரண குழுவின் கப்பல் - AP

தெற்கு எல்லை வழியாக நுழையும் டிரக்குகள் திரளான மக்கள், இஸ்ரேலின் தாக்குதல் ஆகியவற்றைக் கடந்து மறுமுனைக்கு செல்வதில் சிக்கல்கள் நிலவுகின்றன.

பட்டினியை ஆயுதமாக இஸ்ரேல் பயன்படுவதாக ஐரோப்பிய யூனியனின் வெளியுறவு தலைவர் செவ்வாய்கிழமை குற்றம் சாட்டினார்.

அமெரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகள் வானில் இருந்து நிவாரண பொருள்களை பாராசூட் மூலம் வீசுதல், கடல் மார்க்கமாக அனுப்புதல் ஆகிய முறைகளைச் சோதித்து வருகின்றன. இருப்பினும், தரை வழியாக அனுப்பப்படுவதே பயனுள்ளதாக இருக்கும் என கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.