கடல் வழி நிவாரணம்: காஸாவுக்கு பயன் தருமா?

சைப்ரஸில் இருந்து காஸா நோக்கி உணவு பொருள்கள்: நிவாரண முயற்சியின் பயணம்
ஓபன் ஆர்ம்ஸ் குழுவின் மீட்புப் பொருள்கள் ஏற்றிய கப்பல்
ஓபன் ஆர்ம்ஸ் குழுவின் மீட்புப் பொருள்கள் ஏற்றிய கப்பல்AP
Updated on
1 min read

200 டன் உணவு பொருள்கள் ஏற்றப்பட்ட கப்பல் சைப்ரஸில் இருந்து காஸா நோக்கிய பயணத்தை செவ்வாய்கிழமை தொடங்கியது.

முற்றுகையிடப்பட்ட காஸாவுக்கு நிவாரண பொருள்கள் அனுப்பும் கடல் வழி மார்க்கத்தை தொடங்கும் முயற்சியாக இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காஸாவில் போதுமான உணவின்றி லட்சக்கணக்கான மக்கள் தவிப்பதாக ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது.

இப்தார் உணவு தயாரிப்பில் பாலஸ்தீன பெண்கள்
இப்தார் உணவு தயாரிப்பில் பாலஸ்தீன பெண்கள்AP

நட்சத்திர சமையல் வல்லுநர் ஜோஸ் ஆண்ட்ரஸால் நிறுவப்பட்ட வொர்ல்ட் ஃபுட் கிட்சன் என்கிற அறக்கட்டளை, நிவாரண பொருள்கள் ஏற்றிச் செல்லும் கப்பல் புறப்பட்டதாக எக்ஸ் தளத்தில் தெரிவித்தது.

காஸாவுக்கு அருகில் கடல் பாலம் அமைக்கும் திட்டம் குறித்த அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டது. இந்த பாலம் செயல்பட சில காலம் எடுக்கும் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com