வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானிலிருந்து பயங்கரவாதம் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையின் போது பாகிஸ்தான் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
மேலும், பாகிஸ்தானில் தாக்குதல் நடத்துவதற்கு தங்கள் பகுதியை பயங்கரவாதிகள் பயன்படுத்த தலிபான்கள் அனுமதிக்கக்கூடாது என்றும் அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தங்கள் நாட்டில் தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளுக்கு ஆப்கன் தலிபான்கள் புகலிடம் அளிப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டி வருகிறது.
இந்த நிலையில், ஆப்கன் எல்லையையொட்டி கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 7 வீரா்கள் உயிரிழந்தனா். அதற்கு பதிலடியாக ஆப்கனில் பாகிஸ்தான் விமானத் தாக்குதல் நடத்தியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கா இவ்வாறு கூறியுள்ளது.
தொடர்புடையது
ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்

ஈரான் - அமெரிக்கா அமைதிப்பேச்சு! சௌதி, கத்தார், துருக்கி செல்கிறார் பாக். பிரதமர்!

ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தையின் இரண்டாம் சுற்று அடுத்த வாரம் நடைபெறுமா?
பொதுமக்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல்: ஆப்கன் குற்றச்சாட்டு!
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


