ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

இஸ்ரேல் ராணுவம் ராபாவில் நடவடிக்கைக்கு எச்சரிக்கை!

News image
இஸ்ரேலின் அறிவிப்பையடுத்து ராபாவின் கிழக்குப் பகுதியிலிருந்து வெளியேறும் பாலஸ்தீன மக்கள்- ஏபி
Updated On :6 மே 2024, 12:23 pm

DIN

ராபாவில் தஞ்சமடைந்துள்ள பாலஸ்தீன மக்களை அங்கிருந்து இடம்பெயர அறிவுறுத்தியுள்ளது இஸ்ரேல் ராணுவம். ராபாவுக்குள் தரைவழி ராணுவ நடவடிக்கையை தொடங்கவிருப்பதற்கான அறிகுறியாக இந்த அறிவிப்பு கருதப்படுகிறது.

அக்.7-ம் தேதி தொடங்கிய இஸ்ரேல்- ஹமாஸ் போர் ஏழாவது மாதமாகத் தொடர்ந்துவரும் நிலையில் திங்கள்கிழமை இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது, இரு தரப்புக்குமிடையே நடைபெற்று வரும் போர் நிறுத்த பேச்சுவார்த்தையை பாதிக்கும் என கத்தார் எச்சரித்துள்ளது.

இஸ்ரேலின் அறிவிப்பையடுத்து ராபாவின் கிழக்குப் பகுதியிலிருந்து வெளியேறும் பாலஸ்தீன மக்கள்

இஸ்ரேலின் அறிவிப்பையடுத்து ராபாவின் கிழக்குப் பகுதியிலிருந்து வெளியேறும் பாலஸ்தீன மக்கள்

23 லட்சத்துக்கும் அதிகமான காஸா மக்கள் இஸ்ரேலின் போர் நடவடிக்கைகளால் காஸாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து தெற்குக் காஸாவில் உள்ள ராபாவில் தஞ்சமடைந்துள்ளனர்.

7 மாதங்களாக நடைபெற்றுவரும் போரில் ஹமாஸின் புகலிடமாக ராபா மாறியுள்ளதாக இஸ்ரேல் அதிகாரிகள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகின்றனர். ஆகவே தரைவழி ராணுவ முன்னேற்றம் தவிர்க்க முடியாதது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இஸ்ரேலின் அறிவிப்பையடுத்து ராபாவின் கிழக்குப் பகுதியிலிருந்து வெளியேறும் பாலஸ்தீன மக்கள்

இஸ்ரேலின் அறிவிப்பையடுத்து ராபாவின் கிழக்குப் பகுதியிலிருந்து வெளியேறும் பாலஸ்தீன மக்கள்

இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் நடவ் ஷோஷானி, ‘ஏறத்தாழ 1 லட்சம் பேரை, இஸ்ரேல் அறிவித்த அருகிலுள்ள மனிதநேய மண்டலமான முவாஸி பகுதிக்கு இடம்பெயர அறிவுறுத்தியுள்ளோம். இஸ்ரேல் சில வரையறைக்கப்பட்ட நோக்கத்துக்கான நடவடிக்கைக்குத் திட்டமிட்டு வருகிறது’ என அவர் குறிப்பிட்டார்.

நகரத்துக்குள் எப்போது ராணுவ ஊடுருவல் தொடங்கும் என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை.

கடந்த அக்டோபர் முதல் இஸ்ரேல் தரைவழி நடவடிக்கை தொடங்கவிருப்பதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. எனவே இந்த இடம்பெயரக் கோரும் அறிவிப்பும் ராபாவுக்குள் ராணுவத்தின் ஊடுருவலுக்கான அறிகுறி எனக் கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.