இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினா் கடந்த அக். 7-ஆம் தேதி தாக்குதல் நடத்தி சுமாா் 1,200 பேரை படுகொலை செய்ததற்குப் பதிலடியாக, காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 35,000த்தை நெருங்கியுள்ளது.
காஸாவில் ராஃபா நகரில் இஸ்ரேல் ராணுவம் போர் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேலை எதிர்க்கும் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த வீரர்களுக்கு துருக்கி மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக துருக்கி அதிபர் எர்டோகன் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கி அதிபர் எர்டோகன் - படம் | ஏபி
அங்காரா நகரில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், “ஹமாஸ் படையை சேர்ந்த 1,000 பேர் துருக்கியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று பேசினார்.
இதைத் தொடர்ந்து, இஸ்ரேலை எதிர்க்கும் ஹமாஸ் படைக்கு துருக்கி ஆதரவும் அடைக்கலமும் அளிப்பதாகப் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், துருக்கி அதிபர் தவறுதலாக பேசியிருப்பதாகவும், அவர் “காஸாவை சேர்ந்த 1,000 பேர் தங்கள் நாட்டில் சிகிச்சை பெற்று வருவதாகவும்” கூற முற்பட்டார் எனவும் துருக்கி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

துருக்கி கடல்பகுதியில் ஆப்கன் அகதிகளின் படகு கவிழ்ந்து விபத்து! 19 பேர் பலி!
ஈரானை விட்டுவைத்தால் இஸ்ரேல் அழிக்கப்பட்டிருக்கும்: முன்னெச்சரிக்கையாகத் தாக்குதல்! - டிரம்ப்

கேரளத்தில் காதலனை மணந்த கும்பமேளா நாயகி மோனலிசா! பாதுகாப்பு கேட்கிறார்!

குடந்தை அருகே விருந்து சாப்பிட்ட 47 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு
வீடியோக்கள்

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை


