திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

ராஃபாவின் உள்புறங்களில் இஸ்ரேல் ராணுவம்!

ராஃபாவில் இஸ்ரேல் ராணுவ ஊடுருவல்!

News image

காஸா நோக்கி செல்லும் இஸ்ரேலிய டாங்கி - ஏபி

Updated On :14 மே 2024, 6:08 pm IST

ராஃபாவின் உள்புறப் பகுதிகள் வரை இஸ்ரேல் ராணுவம் ஊடுருவியுள்ளதாக களத்திலிருந்து பெறப்படுகிற தகவல்கள் தெரிவிக்கின்றன.

நகரின் கிழக்குப் பகுதியில் இருந்து இஸ்ரேல் டாங்கிகள் மேற்கு நோக்கி முன்னேறி வருவதாக தெரிகிறது. இஸ்ரேல் ராணுவம் இது குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.

ராஃபாவில் இருந்து வெளியேறும் மக்கள்

ராஃபாவில் இருந்து வெளியேறும் மக்கள்

10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் புகலிடம் அடைந்துள்ள ராஃபாவில் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளை விரிவாக்குவதை அமெரிக்கா கண்டித்துள்ளது.

ராஃபாவின் கிழக்கு எல்லைப்புறத்தில் கடந்த வாரம் இஸ்ரேல் முன்னேற தொடங்கியது முதல் 4.5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.

ராஃபாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் படைகளின் வாகனங்களை செவ்வாய்க்கிழமை தங்கள் வீரர்கள் தாக்கியதாக ஹமாஸ் அறிவித்தது. காயமுற்ற ராணுவ வீரர்களை மீட்க அல்-சலாம் பகுதில் மீட்பு ஹெலிகாப்டர்கள் வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.