ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சியின் இறுதி ஊர்வலம் புதன்கிழமை தெஹ்ரானில் நடைபெற்றது. ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
விபத்தில் பலியானவர்களின் உடல்கள் கொண்டு செல்லப்படும் வாகனத்தை மக்கள் திரள் சூழ்ந்தது. இவர்களின் இறுதி அஞ்சலி ஈரானின் மேல்மட்ட தலைவரான அயதுல்லா அலி கமேனி முன்பாக நடத்தப்பட்டது.
தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் இருந்து விடுதலை சதுக்கம் வரை ஊர்வலம் சென்றுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை வடமேற்கு ஈரானில் ரய்சி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. 8 பலியான விபத்துக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக நாட்டில் 5 நாள்கள் துக்கம் கடைபிடிக்க கமேனி உத்தரவிட்டார்.
புதன்கிழமை நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் பல்வேறு கட்சிகளின் பிரமுகர்கள், ராணுவ தளபதிகள், நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.
அதிபரின் உடல் அவரது சொந்த ஊரான மசாத்தில் வியாழக்கிழமை அடக்கம் செய்யப்படவுள்ளது.
ஈரான் அரசு ரயில்வே, அதிபரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரும் மக்களுக்காக தெஹ்ரான் முதல் மசாத் வரை சிறப்பு ரயில்களை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புனித வெள்ளி; சிலுவைப் பாதை ஊர்வலம்! ஏராளமானோர் பங்கேற்பு!

ஹோர்முஸ் திறக்கப்பட்டால் ஈரான் கேட்கும் போர்நிறுத்தம் பரிசீலனை! - டிரம்ப் பேச்சு!

அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்குங்கள்; இல்லையேல் போரிடுங்கள்! - அதிபர் டிரம்ப்

ஈரானின் கார்க் தீவை கைப்பற்றுவோம்: டொனால்ட் டிரம்ப்!
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


