மெய்யான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சியே நம் இலக்கு: அண்ணாமலைதவெக அரசு இந்த ஆண்டு ரூ. 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது : அண்ணாமலைவீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிஎதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
/

வாஷிங்டன், கலிஃபோர்னியாவில் கமலா வெற்றி! அமெரிக்க வாக்கு எண்ணிக்கையில் பரபரப்பு

அமெரிக்காவின் வாஷிங்டன், கலிஃபோர்னியாவில் கமலா ஹாரிஸ் வெற்றி..

News image

அமெரிக்க வாக்கு எண்ணிக்கையில் பரபரப்பு - AP

Updated On :6 நவம்பர் 2024, 10:09 am IST

வாஷிங்டன், கலிஃபோர்னியாவில் கமலா ஹாரிஸின் வெற்றி உறுதி செய்யப்பட்டதால், அமெரிக்க அதிபர் தேர்தலில் பரபரப்பு அதிகரித்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலையில் தொடங்கி புதன்கிழமை காலை வரையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, புதன்கிழமை காலை 5.30 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது.

இதுவரையில் வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளப்பட்ட மாகாணங்களில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் ஆதிக்கம் செலுத்தி வந்தார். இந்த நிலையில், வாஷிங்டன், கலிஃபோர்னியா போன்ற அதிக பிரதிநிதிகளை கொண்ட மாகாணங்களில் வெற்றி பெற்ற கமலா ஹாரிஸ், டிரம்பை நெருங்கி வருவதால் பரபரப்பு அதிகரித்துள்ளது.

மொத்தம் 50 மாகாணங்களில் 538 பிரதிரிகளை தேர்வு செய்வதற்கு தேர்தல் நடைபெற்ற நிலையில், வெற்றி பெற 270 பிரதிநிதிகள் தேவை. காலை 10 மணி நிலவரப்படி, டிரம்பின் குடியரசு கட்சியின் 230 வேட்பாளர்களும், ஜனநாயகக் கட்சியின் 187 வேட்பாளர்களும் முன்னிலையில் உள்ளனர்.

இதுவரை டிரம்ப் 24 மாகாணங்களையும், கமலா ஹாரிஸ் 14 மாகாணங்களையும் கைப்பற்றியுள்ளார்கள். வாக்கு சதவிகிதத்தை பொறுத்தவரை டிரம்ப் 51.4%, கமலா 47.2% பெற்றுள்ளனர்.

அமெரிக்க அதிபரை முடிவு செய்யும் போர்க்கள மாகாணங்களான வடக்கு கரோலினா, மிஷிகன், அரிஸோனா, பென்சில்வேனியா, விஸ்கான்சின், ஜாா்ஜியா உள்ளிட்ட மாகாணங்களில் டிரம்ப் தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.