சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

இலக்குகளை அடையும்வரை லெபனானில் போர் நிறுத்தம் இல்லை: இஸ்ரேல்

இஸ்ரேல் தனது இலக்குகளை அடையும் வரை இஸ்ரேலில் போர் நிறுத்தம் இல்லை என அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்தார்.

News image

தாஹியா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் சூழ்ந்த கரும்புகை - AP

Updated On :12 நவம்பர் 2024, 12:29 pm

இஸ்ரேல் தனது இலக்குகளை அடையும் வரை போர் நிறுத்தம் இல்லை என அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்தார்.

லெபனான் தலைநகர் பெய்ரூட் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் இன்று (நவ. 12) வான்வழித் தாக்குதல் நடத்தியது.

லெபனானின் தெற்கு புறநகர் பகுதிகளில் ஹிஸ்புல்லாக்களின் நடமாட்டமுள்ள 12 இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் சமூகவலைதளத்தில் அறிவித்திருந்தது.

அப்பகுதிகளிலுள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும் எச்சரித்திருந்தது. மேலும் தாக்குதல் நடத்தவுள்ள இடங்களையும் வரைபடத்தில் குறிப்பிட்டிருந்தது.

இதன்படி, அப்பகுதிகளிலிருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

பெய்ரூட்டில் இஸ்ரேல் தாக்குதல்

இதனைத் தொடர்ந்து பெய்ரூட்டின் தெற்கு பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதனால் தெற்கு புறநகர் பகுதிகளில் கரும் புகை சூழ்ந்து காணப்பட்டது.

கடந்த மாதம் லெபனானின் நபாட்டியா பகுதிகளில் உள்ள சந்தைப் பகுதிகளில், நகராட்சி பகுதிகளிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் மேயர் உள்பட பலர் கொல்லப்பட்டனர்.

செப்டம்பர் 23ஆம் தேதியிலிருந்து லெபனானின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இஸ்ரேல் தீவிரமாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. ஒரு வாரம் கழித்து தரை வழியாகவும் நுழைந்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதலைத் தொடர்ந்தது.

பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் படையினருக்கு ஆதரவு தெரிவித்து லெபனானின் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுக்கள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.