மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பிலிப்பின்ஸை புரட்டிப்போட்ட புயல்கள்! பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு!

அங்கு கடந்த 4 வார காலத்தில் 6 புயல்கள் கரையைக் கடந்துள்ளன

News image
- AP
Updated On :18 நவம்பர் 2024, 11:28 am

DIN

மணிலா: பிலிப்பின்ஸ் கடந்த ஒரு மாத காலத்தில் 6 புயல்களால் மிகப்பெரியளவில் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. அங்கு கடந்த 4 வார காலத்தில் 6 புயல்கள் கரையைக் கடந்துள்ளன.

இந்த நிலையில் கடைசியாக, பிலிப்பின்ஸின் கிழக்கே அமைந்துள்ள கேட்டெண்டுவானெஸ் தீவில் 'மேன்-இ (பெப்பிடோ)’ புயல் சனிக்கிழமை நள்ளிரவு கரையைக் கடந்துள்ளது. அப்போது, மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று தொடர்ந்து வீசியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிலிப்பின்ஸை கடந்த ஒரு மாத காலத்தில் தாக்கிய புயல்களில் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாக மேன் -இ புயல் கரையைக் கடந்தபோது அதன் தாக்கம் இருந்ததாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

மேன் -இ புயலா வீசிய சூறைக்காற்று கனமழையால், நுவே விஸ்காயா மாகாணத்தில் அம்பாகியோ நகரில் திங்கள்கிழமை ஏற்பட நிலச்சரிவில் வீடு ஒன்று தரைமட்டமானது. அதில் வீட்டிலிருந்த குழந்தைகள் உள்பட 7 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மண்ணில் புதைந்த பலரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த மாத பிற்பகுதியில், பிலிப்பின்ஸில் ‘ட்ராமி’ புயல் தாக்கியதில், ஒரு மாத காலத்தில் பெய்ய வேண்டிய அளவுக்கு மழைப்பொழிவு, வெறும் 24 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்தது. இதனால் பல்வேறு நகரங்களிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் வீசிய சூறைக்காற்று, மற்றும் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 160-ஐ கடந்துள்ளது.

அடுத்தடுத்த புயல்களால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள பிலிப்பின்ஸில் பல்வேறு பகுதிகளிலும் சுமார் 7 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சூறைக்காற்றின் பாதிப்பால் சுமார் 8000 வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், 100-க்கும் மேற்பட்ட நகரங்களில் மின் விநியோகம் தடைபட்டுள்ளது. பல இடங்களில் தொலைத்தொடர்பு சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பிலிப்பின்ஸுக்கு கூடுதலாக 1 மில்லியன் டாலர் நிதியுதவி அளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அமெரிக்க படைகளும் ஈடுபடும் என்றும் அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் லாய்ட் ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.