சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

கனடா பிரதமர் ராஜிநாமா செய்ய வலியுறுத்தல்!

இந்தியாவுடனான உறவுகளில் விரிசல்.. ஜஸ்டின் ட்ரூடோ ராஜிநாமா செய்ய வலியுறுத்தல்!

News image

PTI

Updated On :16 அக்டோபர் 2024, 10:10 pm IST

ஒட்டாவா: இந்தியாவுடனான உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ராஜிநாமா செய்ய வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.

கனடா மக்களை குறிவைத்து நடத்தப்படும் குற்றச்செயல்களுக்கு இந்திய அரசு துணை நிற்பதாக கடந்த திங்கள்கிழமை இந்தியா மீது கனடா பிரதமர் குற்றஞ்சாட்டியிருந்தது இரு நாட்டு உறவுகளில் பெரும்விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ராஜிநாமா செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்துள்ள லிபரல் கட்சியைச் சேர்ந்த எம்.பி. சீன் கேஸே, “கனடா மக்கள் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலக விரும்புகிறார்கள்” என்றும் பகிரங்கமாகக் கூறியுள்ளார்.

ஜஸ்டின் ட்ரூடா தலைமையில் லிபரல் கட்சினரிடையே உள்கட்சி பூசல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த வாரம், லிபரல் கட்சி எம்.பி.க்கள் பெரும்பாலானோர் ஒன்றுகூடி முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். அவற்றில் குறிப்பாக, இந்தியாவுடனான உறவுகள் குறித்தும், லிபரல் கட்சியின் செல்வாக்கு நிறைந்த பகுதியாக கருதப்பட்ட டோரண்டோ செயிண்ட் பாலில், கடந்த ஜூனில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அக்கட்சி தோல்வியைச் சந்தித்துள்ளது குறித்தும் முக்கியமாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ‘கனடா மக்கள் மீது தாக்குதல் சம்பவங்களை நிகழ்த்த தனது தூதரக அதிகாரிகளை பயன்படுத்துவதுடன் திட்டமிட்ட குற்றங்களில் இந்தியா ஈடுபடுகிறது’ என்று கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினாா். இக்குற்றச்சாட்டை இந்தியா நிராகரித்தது.

இதைத்தொடர்ந்து கனடா பிரதமரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து, இந்தியாவில் உள்ள கனடா தூதா் உள்ளிட்ட 6 அதிகாரிகள் வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு பதிலடி நடவடிக்கையாக கனடாவுக்கான இந்திய தூதா் உள்பட கனடாவிலுள்ள தூதரக அதிகாரிகளை உடனடியாக வெளியேற கனடா அரசு உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.