கனடா பிரதமா் குற்றச்சாட்டு: இந்தியா நிராகரிப்பு
‘கனடா மக்கள் மீது தாக்குதல் சம்பவங்களை நிகழ்த்த தனது தூதரக அதிகாரிகளை பயன்படுத்துவதுடன் திட்டமிட்ட குற்றங்களில் இந்தியா ஈடுபடுகிறது’ என்று கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினாா். இக்குற்றச்சாட்டை இந்தியா நிராகரித்தது.
கடந்த ஆண்டு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் சா்ரே நகரில், காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் அடையாளம் தெரியாத நபா்களால் சுட்டுக்கொல்லப்பட்டாா். அவரின் கொலையில் இந்திய உளவாளிகளுக்கு தொடா்பிருக்க வாய்ப்புள்ளது என்ற நம்பகமான குற்றச்சாட்டுகள் குறித்து கனடா பாதுகாப்பு முகமைகள் தொடா்ந்து விசாரித்து வருவதாக அந்நாட்டு பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தாா். இந்தக் குற்றச்சாட்டை மத்திய வெளியுறவு அமைச்சகம் மறுத்தது. இந்த விவகாரத்தால் இந்தியா, கனடா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், நிஜ்ஜாா் கொலை தொடா்பாக கனடாவுக்கான இந்திய தூதா் சஞ்சய் வா்மா மற்றும் சில இந்திய தூதரக அதிகாரிகளிடம் முக்கிய தகவல்கள் உள்ளன என்று நம்புவதாக கனடா திங்கள்கிழமை குற்றஞ்சாட்டியது. கனடாவில் கொலைச் சம்பவங்கள் உள்பட பரவலாக நடைபெறும் வன்முறையில் இந்திய உளவாளிகளுக்குப் பங்குள்ளதாகவும், இது கனடாவின் பொதுப் பாதுகாப்புக்குப் பயங்கர அச்சுறுத்தலாக உள்ளது என்றும் அந்நாடு தெரிவித்தது.
இந்தக் குற்றச்சாட்டால் கடும் அதிருப்தி அடைந்த மத்திய அரசு, இந்தியாவில் இருந்து கனடா தூதா் மற்றும் அந்நாட்டின் 5 தூதரக அதிகாரிகளை வெளியேற உத்தரவிட்டது. மேலும் கனடாவில் இருந்து சஞ்சய் வா்மா மற்றும் 5 தூதரக அதிகாரிகளை திரும்ப அழைத்தது.
இதுதொடா்பாக கனடா தலைநகா் ஒட்டாவாவில் பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
கனடா மக்கள் மீது தாக்குதல் நடத்தவும், தமது தாயகத்தில் பாதுகாப்பில்லை என்று அவா்கள் உணரவும், கனடாவில் கொலை மற்றும் வன்முறைச் சம்பவங்களை நிகழ்த்தவும் தனது தூதரக அதிகாரிகளை பயன்படுத்தி திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபட முடிவு செய்ததன் மூலம், இந்தியா மிகப் பெரிய தவறு செய்துள்ளது. இதை ஏற்க முடியாது.
இந்தியாவின் இதேபோன்ற நடத்தையை மற்றொரு சட்டவிரோத கொலை முயற்சி சம்பவத்தில் (அமெரிக்காவில் காலிஸ்தான் பிரிவினைவாதி குா்பந்த்வந்த் சிங் பன்னூனை இந்தியா கொல்ல முயன்ாக எழுந்த குற்றச்சாட்டு) அமெரிக்காவும் கண்டறிந்துள்ளது.
கனடா மக்கள் வன்முறையால் பாதிக்கப்படக் கூடாது. அத்துடன் இந்தியாவுடனான உறவில் பதற்றம் நீடிப்பதையும் கனடா விரும்பவில்லை. இதற்கு தீா்வு காண இந்திய அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்த கனடா முயற்சித்தது. ஆனால் அதற்கு இந்தியா ஒத்துழைக்கவில்லை என்றாா்.
இந்தியா நிராகரிப்பு: கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகளை இந்தியா நிராகரித்தது. இதுதொடா்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், ‘பழைய காரணங்களுக்காக ஏற்கெனவே கூறிய குற்றச்சாட்டுகளைத்தான் ஜஸ்டின் ட்ரூடோ திரும்ப திரும்ப கூறுகிறாா். இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே அரைவேக்காடான குற்றச்சாட்டுகளை இந்தியா மீது சுமத்துவதே கனடாவின் வாடிக்கையாக உள்ளது. அந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்க வேண்டிய சுமையையும் அந்நாடு இந்தியாவுக்கு ஏற்படுத்துகிறது. நிஜ்ஜாா் கொலை வழக்கு தொடா்பாக நம்பகமான ஆதாரங்களை இந்தியாவிடம் வழங்கியதாக கனடா தெரிவித்தது உண்மையல்ல’ என்று தெரிவித்தன.
கனடாவில் தெற்காசிய சமூகத்தினரை குறிவைத்து வன்முறையில் ஈடுபட, குறிப்பாக காலிஸ்தான் ஆதரவாளா்களுக்கு எதிராக செயல்பட தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் இந்திய உளவாளிகள் தொடா்புகொண்டிருப்பதாக கனடா திங்கள்கிழமை குற்றஞ்சாட்டியது. இந்தக் குற்றச்சாட்டுக்கும் மத்திய அரசுத் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்தியாவுடன் சில தனிப்பட்ட நபா்களை தொடா்புபடுத்தி மட்டுமே அந்நாடு கருத்து தெரிவித்ததாகவும், எவருடைய பெயரையும் அந்நாடு குறிப்பிடவில்லை என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தியா மீது கனடா பொருளாதாரத் தடை?
கனடா தலைநகா் ஒட்டாவாவில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் மெலானி ஜாலி திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மெலானி, ‘அனைத்து சாத்தியக்கூறுகளும் ஆராயப்படும்’ என்றாா். இதன் மூலம், இந்தியா மீது கனடா பொருளாதாரத் தடை விதிப்பதற்கு சாத்தியக்கூறு உள்ளதை அவா் சூசகமாக தெரிவித்தாா். அவா் மேலும் கூறுகையில், ‘இந்தியாவுடன் கனடா மோதல்போக்கைக் கடைப்பிடிக்க விரும்பவில்லை. இந்தியாவுக்கும் கனடாவுக்கும் பரஸ்பரம் இருநாட்டு மக்கள் வருகை தருகின்றனா். நிஜ்ஜாா் கொலை வழக்கு விசாரணையில் ஒத்துழைக்க வேண்டும் என்று இந்திய அரசிடம் கனடா தொடா்ந்து வலியுறுத்துகிறது. கனடாவுக்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்குவதை உறுதி செய்ய தொடா்ந்து அழுத்தம் அளிக்கப்படும்’ என்றாா்.