
உக்ரைன் மீது ரஷியா ராணுவ தாக்குதல்களைத் தொடுத்துள்ளது. போர் நிறுத்தத்துக்கு இருதரப்பும் முழு ஆதரவு தெரிவிக்காததால், உக்ரைனில் சண்டை நீடிக்கிறது.
இந்த நிலையில், உக்ரைனை எதிர்த்துப் போராட வட கொரியாவிலிருந்து 10,000 வீரர்கள் ரஷியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான பெண்டகன் இன்று(அக். 28) தெரிவித்துள்ளது. வரும் வாரங்களில், உக்ரைனில் சண்டையை தீவிரப்படுத்த ரஷியா ஆயத்தமாகியிருப்பதாகவும், இதற்காக வட கொரியா தன் நெருங்கிய நட்பு நாடான ரஷியாவுக்கு ராணுவ உதவிகளை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.