பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

இஸ்ரேல் துப்பாக்கிச்சூடு: அமெரிக்க பெண் உயிரிழப்பு

மேற்குக் கரையில் இஸ்ரேல் ராணுவ வீரா்கள் துப்பாக்கியால் சுட்டதில் அமெரிக்க பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
கோப்புப்படம்
Updated On :6 செப்டம்பர் 2024, 7:55 pm

Din

மேற்குக் கரையில் இஸ்ரேல் ராணுவ வீரா்கள் துப்பாக்கியால் சுட்டதில் அமெரிக்க பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது. இந்நிலையில், அங்குள்ள பெய்டா பகுதியில் யூத குடியிருப்புகள் விரிவாக்கத்துக்கு எதிராக வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது. அப்போது இஸ்ரேல் ராணுவ வீரா்கள் சுட்டதில் ஐசெனுா் எஸ்கி (26) என்ற அமெரிக்க பெண் உயிரிழந்தாா்.

அந்தப் பெண் உயிரிழந்ததை உறுதி செய்த அமெரிக்க அரசு, அவரை இஸ்ரேல் வீரா்கள்தான் சுட்டுக் கொன்றாா்களா என்று தெரிவிக்கவில்லை. அதேநேரம், இந்த சம்பவம் தொடா்பாக விசாரணை மேற்கொள்ள இஸ்ரேலிடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

சமூக செயற்பாட்டாளரான ஐசெனுா் எஸ்கி துருக்கி குடியுரிமையும் பெற்றிருந்த நிலையில், அவரின் மரணத்துக்கு காரணமானவா்களை நீதிக்கு முன் நிறுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று துருக்கி வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

அதேவேளையில், போராட்டம் நடைபெற்ற பகுதியில் வன்முறையைத் தூண்டிய நபரை குறிவைத்தே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும், இந்த சம்பவம் குறித்த விவரங்களை ஆராய்ந்து வருவதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.