ஜெருசலேம்: மேற்குக் கரையில் இஸ்ரேல் ஆளுகையில் உள்ள பகுதியில் ஊடுருவி ராணுவ வீரர்களைத் தாக்க முயன்ற 3 பாலஸ்தீனர்களை சுட்டுக் கொன்றதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
அதோரா பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த வீரர்கள் மீது பாலஸ்தீனர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அதற்கு பதிலடிகொடுத்த போது 3 பாலஸ்தீனர்கள் உயிரிழந்ததாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
தாக்குதலில் ஈடுபட்ட 34 வயதான பாலஸ்தீனர் காலில் காயம் ஏற்பட்டதாக இஸ்ரேல் மீட்புப் படை தெரிவித்துள்ளது. மேலதிக விபரங்களை வெளியிடவில்லை.
இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர், 100-வது நாளைத் தொடவுள்ள நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதையும் படிக்க: தைவானில் இன்று தோ்தல்
மேற்குக் கரைப் பகுதியில் இதுவரை 344 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.