மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

மேற்குக் கரையில் இஸ்ரேல்- பாலஸ்தீனர்கள் மோதல்: 3 பேர் பலி

இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் 100 நாள்களைத் தாண்டியும் தொடர்ந்துவரும் நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

News image

லெபனான் எல்லையில் இஸ்ரேல் ராணுவம் | AP

Updated On :13 ஜனவரி 2024, 8:08 am IST

ஜெருசலேம்: மேற்குக் கரையில் இஸ்ரேல் ஆளுகையில் உள்ள பகுதியில் ஊடுருவி ராணுவ வீரர்களைத் தாக்க முயன்ற 3 பாலஸ்தீனர்களை சுட்டுக் கொன்றதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

அதோரா பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த வீரர்கள் மீது பாலஸ்தீனர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அதற்கு பதிலடிகொடுத்த போது 3 பாலஸ்தீனர்கள் உயிரிழந்ததாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.

தாக்குதலில் ஈடுபட்ட 34 வயதான பாலஸ்தீனர் காலில் காயம் ஏற்பட்டதாக இஸ்ரேல் மீட்புப் படை தெரிவித்துள்ளது. மேலதிக விபரங்களை வெளியிடவில்லை.

இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர், 100-வது நாளைத் தொடவுள்ள  நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதையும் படிக்க: தைவானில் இன்று தோ்தல்

மேற்குக் கரைப் பகுதியில் இதுவரை 344 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.