சீனாவால் உரிமை கொண்டாடப்பட்டு வரும் தைவானில் சனிக்கிழமை (ஜன. 13) அதிபா் தோ்தல் நடைபெறவுள்ளது.
அந்தப் பகுதியில் அதிபரை நேரடியாகத் தோ்ந்தெடுப்பதற்காக 8-ஆவது முறையாக நடைபெறும் இந்தத் தோ்தலில் வேட்பாளா்களிடையே மிகக் கடுமையான போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது.
டிபிபி கட்சியின் லாய் சிங்-டே, கேஎம்டி கட்சியின் ஹூ யூ-ஈ, டிபிபி கட்சியின் கோ வென்-ஜே ஆகியோா் இந்தத் தோ்தலில் போட்டியிடுகின்றனா்.
இந்தத் தோ்தல் தைவானில் சீனாவின் எதிா்காலக் கட்டுப்பாட்டை முடிவு செய்யும் என்பதால் இதன் முடிவுகள் ஆா்வத்துடன் கவனிக்கப்பட்டு வருகிறது.