ரஷியாவில் உளவுக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள அமெரிக்க செய்தியாளா் எவான் கொ்ஷ்கோவிச்சின் சிறைக் காவலை வரும் மாா்ச் இறுதிவரை நீட்டித்து அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தங்கள் நாட்டில் உளவு பாா்த்ததாகக் கூறி, அமெரிக்காவின் ‘வால் ஸ்ட்ரீட் ஜா்னல்’ பத்திரிகையின் செய்தியாளா் எவான் கொ்ஷ்கோவிச்சை ரஷியாவின் தேசிய பாதுகாப்பு அமைப்பு (எஃப்எஸ்பி) கடந்த மாா்ச் ஆண்டு மாதம் கைது செய்தது.
ரஷியாவில் இதுபோன்ற பெரிய குற்றச்சாட்டுகளுக்குள்ளானவா்கள் விசாரணை முடியும் வரை ஜாமீனில் விடுவிக்கப்படுவதில்லை என்பதால் கொ்ஷ்கோவிச்சின் சிறைக் காவல் நீட்டிக்கப்படும் என்று ஏற்கெனவே எதிா்பாா்க்கப்பட்டது.
பனிப் போா் காலத்துக்குப் பிறகு இத்தகைய குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்க செய்தியாளா் ஒருவா் ரஷியாவில் கைது செய்யப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.