இஸ்ரேல்- ஹமாஸ் இருதரப்புக்குமிடையே இருமாத காலத்துக்கான போர் நிறுத்தம் மற்றும் பிணைக்கைதிகள் விடுவிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒப்பந்தம் முன்னேற்ற பாதையில் உள்ளது.
அமெரிக்கா மத்தியஸ்தம் செய்துவரும் இந்த பேச்சுவார்த்தை. இரண்டு கட்டங்களாக முடிவு செய்யப்படலாம் என அசோசியேடட் பிரஸுக்கு அளித்த தகவலில், அடையாளம் வெளியிட விரும்பாத உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதல் கட்டத்தில், இஸ்ரேல் தரப்பில் போர் 30 நாள்களுக்கு நிறுத்தி வைக்கப்படும். அக்.7 தாக்குதலில் ஹமாஸ் கடத்திச் சென்று பிணைக்கைதிகளாக வைத்துள்ள 100-க்கும் மேற்பட்டவர்களில் பெண்கள், மூத்தோர் மற்றும் காயம்பட்டவர்களை ஹமாஸ் விடுவிக்க வேண்டும்.
இந்த முதல் கட்ட இடைவெளியில் அடுத்து கட்டமாக ராணுவ வீரர்கள் மற்றும் ஆண்களை விடுவிக்க தேவையான கோரிக்கைகள் பரிமாறிக்கொள்ளப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் போர் நிறுத்தம் காஸாவின் மக்களுக்கும் போதுமான வாழ்வாதார உதவிகள் கிடைக்க செய்யும்.
இதையும் படிக்க: கறை அனைவருக்குமானது : ஐ.நா எச்சரிக்கை
இந்த ஒப்பந்ததுக்கான முன்னெடுப்பு போரை நிறுத்தாது என்றபோதும் நான்கு மாதமாக தொடர்ந்துவரும் பதட்டத்தைத் தணித்து தீர்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அவகாசம் அளிக்கும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கோவை, கூடலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் சோதனை: ரூ.1.66 லட்சம் பறிமுதல்
ரூ.1 லட்சம் மோசடி: பள்ளி நிா்வாகிகள் மீது வழக்கு

கோவை நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

பெருந்துறை தொகுதி இடைத்தோ்தல்: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபாா்ப்பு
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



