அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

கறை அனைவருக்குமானது : ஐ.நா எச்சரிக்கை

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நிதியுதவியை நிறுத்தியதைத் தொடர்ந்து ஐநா, காஸா குறித்து கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

News image

ஸ்பெயினில் நடைபெற்ற பாலஸ்தீன ஆதரவு போராட்டம்| AP

Updated On :28 ஜனவரி 2024, 8:32 am IST

இஸ்ரேலில் ஹமாஸ் படையினர் அக்.7 அன்று நடத்திய கொடூரத் தாக்குதலில் ஐநாவின் பாலஸ்தீன அகதிகள் முகமையின் பணியாளர்களுக்கு தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 9 நாடுகள் அமைப்புக்கு அளித்து வந்த நிதியுதவியை நிறுத்த முடிவு செய்தது.

இது தொடர்பாக பாலஸ்தீன அகதிகளுக்கான ஐநா முகமையின் தலைவர் பிலிப் லாஸரினி, நடைபெற்று வரும் இஸ்ரேல் -ஹமாஸ் போருக்கு மத்தியில் இது போன்ற முடிவுகள் ஏற்கெனவே தலைவிரித்தாடும் பஞ்சத்தை அதிகரிக்க செய்யும் என தெரிவித்துள்ளார்.

அவர்,  “காஸாவில் உள்ள பாலஸ்தீனர்களுக்கு கூடுதலாக இன்னுமொரு கூட்டுத் தண்டனையைக் கொடுக்காதீர்கள். கறை அனைவருக்கும் பொருந்தும்” எனத் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ராபாவில் இஸ்ரேல் தாக்குதலில் சிதைந்த கட்டடங்களைக் காணும் மக்கள் | AP

ராபாவில் இஸ்ரேல் தாக்குதலில் சிதைந்த கட்டடங்களைக் காணும் மக்கள் | AP

13 ஆயிரம் பணியாளர்கள் கொண்ட ஐநாவின் மேற்குறிப்பிட்ட பிரிவு, காஸாவில் வாழ்வாதார உதவிகளைக் கொண்டு சேர்ப்பதில் முதன்மையான அமைப்பாக செயலாற்றிவருகிறது.

அக்.7 தாக்குதலில் ஐநாவின் பணியாளர்களுக்கு தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து தனது பணியாளர்களில் சிலரை நீக்கம் செய்ததாக முகமை தெரிவித்தது.

இடம்பெயர்ந்த பாலஸ்தீன மக்கள் தற்காலிக முகாமில் | AP

இடம்பெயர்ந்த பாலஸ்தீன மக்கள் தற்காலிக முகாமில் | AP

23 லட்சம் மக்கள்தொகை கொண்ட காஸாவில் 20 லட்சத்துக்கும் அதிகமனோர் வாழ்வதற்கு தேவையான உணவு, வாழ்விடம் ஆகியவற்றுக்கு உதவிகளை நம்பியுள்ளனர். இந்த உயிர்நாடி எப்போது வேண்டுமானாலும் சீர்குலைய வாய்ப்பிருப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.