ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரும் எதற்கும் இலங்கை அனுமதிக்காது: அநுர திசநாயக

இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரும் எதற்கும் இலங்கை அனுமதிக்காது என இலங்கை அதிபர் உறுதி

News image

இந்திய - இலங்கை தலைவர்கள்

Updated On :5 ஏப்ரல் 2025, 3:49 pm IST

கொழும்பு: இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு விரோதமான முறையில் தனது பிரதேசத்தைப் பயன்படுத்த இலங்கை அனுமதிக்காது என்று பிரதமர் மோடியிடம் அந்நாட்டு அதிபர் அநுர குமார திசநாயக உறுதியளித்துள்ளார்.

அரசுமுறைப் பயணமாக பாங்காக் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, நேற்று பயணத்தை முடித்துக்கொண்டு இலங்கை சென்றார்.

இன்று காலை தலைநகர் கொழும்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகவுடன் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பிறகு, இரு நாட்டுத் தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய இலங்கை அதிபர், இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரும் வகையிலான எந்தச் செயலும் இலங்கை மண்ணில் நடக்காது என்று உறுதியளித்தார்.

மேலும், டிஜிட்டல் பொருளாதார மேம்பாட்டின் முக்கியத்துவத்தை இலங்கை உணர்ந்திருக்கிறது. இலங்கையின் தனித்துவ டிஜிட்டல் சேவைக்காக இந்திய அரசு ரூ.300 கோடி தந்ததற்கு நன்றி என்று கூறினார்.

டிஜிட்டல் மயமாக்கலில் இருநாடுகளும் ஒன்றிணைந்து பணியாற்றுவது குறித்தும் இரு நாட்டுத் தலைவர்கள் தலைமையில் நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.